விஜய் பேச்சை தூக்கி எறிந்த விஜய் மகன்… இந்த வயசிலையே இப்படியா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் – சங்கீதா தம்பதியினருக்கு சஞ்சய் என்கின்ற மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள், இதில் மகன் சஞ்சய் அமெரிக்காவில் சினிமா தொடர்பான பட்ட படிப்பை முடித்துள்ளார். அவர் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே சில குறும்படங்களையும் இயக்கி, அந்த குறும்படம் மிக பெரிய வரவேற்பை பெற்று, புலிக்கு பிறந்தது பூனையாகுமா என சஞ்சய் பலரின் பாராட்டை பெற்றார்.

விஜய் மகன் சஞ்சய்க்கு இயக்குனராக வேண்டும் என்கிற விருப்பம், ஆனால் அவருடைய தந்தை விஜய்க்கு மகன் ஹீரோவாக வேண்டும் என்கிற விருப்பம், இந்த நிலையில் சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா, இதற்கு முன்பு விஜய் மகன் சஞ்சய் இயக்கி நடித்த குறும்படத்தை பார்த்துவிட்டு அவரை மனதில் வைத்து கதை ஒன்றை தயார் செய்துள்ளார், இந்த படத்தில் சஞ்சய் நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்பதால், விஜய்யை சந்தித்து படத்தின் கதையை தெரிவித்தவர்,

இந்த படம் உங்கள் மகனை மனதில் வைத்து தான் நான் உருவாக்கியுள்ளேன் என சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். கதை விஜய்க்கு மிகவும் பிடித்து போக, உடனே மகனை தொடர்பு கொண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகுவது குறித்து பேசியுள்ளார். ஆனால் அதற்கு சஞ்சய் தனக்கு ஹீரோவாக நடிப்பதற்கு விருப்பமில்லை என தெரிவித்தவர், மேலும் தன்னுடைய ஒரே விருப்பம் இயக்குனராக வேண்டும் என்பதுதான் என்று திட்டவட்டமாக சஞ்சய் தெரிவித்து விட்டாராம்.

இதே போன்று விஜய் மகன் சஞ்சய்க்கு ஹீரோவாக நடிக்க பல பட வாய்ப்புகள் தொடர்ந்து தேடி வந்து கொண்டே இருந்துள்ளது. தெலுங்கில் மிக பெரிய வெற்றி பெற்ற உப்பெண்ணா தமிழ் ரீமேக்கில் விஜய்யின் மகன் சஞ்சய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது, இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் சஞ்சய் ஹீரோவாக நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் விஜய் மகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி, அதில் விஜய் மகன் சஞ்சய் மறுத்து விட்டார். இப்படி பல இயக்குனர்கள் விஜய் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்க முன் வந்த போது நடிக்க தனக்கு விருப்பம் இல்லை, எனக்கு இயக்குனராக தான் விருப்பம் என தன்னுடைய நிலைபாட்டில் உறுதியாக இருந்த வந்த சஞ்சய்யிடம் அவருடைய தந்தை எவ்வளவோ சொல்லியும் கேட்காததால், மகனை கட்டாய படுத்தவும் விஜய் விரும்ப வில்லை.

இந்நிலையில் விஜய் மகன் சஞ்சய் விரைவில் இயக்குனராக அறிமுகமாவர் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், லைக்கா தயாரிப்பில் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது, இந்நிலையில் எத்தனையோ இயக்குனர்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நிலையில் விஜய் மகன் என்கிற ஒரே காரணத்திற்காக இதற்கு முன்பு எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக கூட பணியாற்றாத சஞ்சய் இயக்குனராக வாய்ப்பு கிடைத்துள்ளது என்கிற விமர்சனத்தை ஏற்று கொள்ள முடியாது.

காரணம் சினிமாவில் ஈடுபாடு கொண்ட சஞ்சய் தந்தை செல்வாக்கை பயன்படுத்தி எதுவுமே தெரியாமல் எளிதாக இயக்குனர் வாய்ப்பை பெறவில்லை. சினிமா தொடர்பான கனடாவில் டிப்ளமோ கோர்ஸ்ஸை முடித்த சஞ்சய் இதைத்தொடர்ந்து, லண்டனிலும் திரைக்கதையை எழுதுவது தொடர்பான படிப்பை மேற்கொண்டார் .அதனை தொடர்ந்து பட்டப்படிப்பை முடித்த சஞ்சய் குறும்படத்தை இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்தவர், அவருடைய இயக்கத்தில் குறுபடமும் இயக்கி வெளியிட்டார்.

இப்படி சினிமா குறித்து நன்கு கற்று தேர்ந்த சஞ்சய், தன்னுடைய முதல் படம் மிக பெரிய வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக கதையை தயார் செய்து லைக்கா நிறுவனத்திடம் தெரிவிக்க, அந்த கதை அவர்களுக்கு மிகவும் பிடித்து போனதை தொடர்தே இயக்குனர் வாய்ப்பை பெற்றுள்ளார் ஜேசன் சஞ்சய் என்றும், அந்த வகையில் தன்னுடைய திறைமையின் அடிப்படையில் தான் ஜேசன் சஞ்சய் இயக்குனராக வாய்ப்பை பெற்றுள்ளார் என்கிறது சினிமா வட்டாரங்கள்.