போதை பொருள் கடத்தல்.. என் ஐ ஏ வளையத்தில் சிக்கிய நடிகை வரலக்ஷ்மி… மாட்டிவிட்டது யார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர் வரலட்சுமி. சிம்புவுடன் போடா போடி படத்தின்மூலம் தன்னுடைய சினிமா கேரியரை துவங்கியவர் இவர். இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். முதல் படம் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து, விஜய், விஷால் என முன்னணி தமிழ் நடிகர்களுடன் நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.

தன்னுடைய மிரட்டலான படங்களின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள வரலட்சுமி, தொடர்ந்து தென்னிந்திய அளவில் படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்த வெற்றிக் கூட்டணியில் இவரை பார்க்க முடிகிறது. இந்நிலையில் என்ஐஏ வரலட்சுமி சரத்குமாருக்கு நேரில் ஆஜராக சம்மன் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. தமிழ்நாட்டின் திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள், வெளிநாட்டவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தலில் தொடர்புள்ளவர்கள்; இதன் மூலமான பணத்தை வைத்து இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கின்றனர் என்ற தகவல் என்.ஐ.ஏ.வுக்கு கிடைத்தது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கேரளாவில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் சிக்கிய சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது.

இவ்வழக்கில் ஈழத்தை சேர்ந்த குணா, புஷ்பராஜ், அஸ்மின் உள்ளிட்ட 13 பேர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். அதில் போதைப் பொருட்கள், ஆயுதங்கள் மூலமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் குறித்து விவரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான குணாவின் கூட்டாளி ஆதிலிங்கம் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். இந்த ஆதிலிங்கம், நடிகை வரலட்சுமியின் உதவியாளர் எனவும் கூறப்பட்டது. போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைத்துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனால், ஆதிலிங்கத்தின் முதலீடு மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காக நடிகை வரலட்சுமியை என்.ஐ.ஏ. விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் விடுத்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் தற்போது வரலட்சுமி ஆந்திராவில் சூட்டிங்கில் உள்ளார். எனவே சிறிது காலம் பிறகு ஆஜர் ஆவார் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால் இப்படி ஒரு சம்மனை என்.ஐ.ஏ. தமக்கு அனுப்பவில்லை என நடிகை வரலட்சுமி மறுத்துள்ளார்.

இது தொடர்பாக தற்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது நடக்கும் சம்பவங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது முக்கியம் என நினைக்கிறேன். தேசிய புலனாய்வு முகமாய் ஆதிலிங்கம் தொடர்பான வழக்கில் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை. உண்மைத்தன்மை அற்றவை.

அப்படியான எந்த சம்மனும் எனக்கு அனுப்பப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் ஃப்ரிலான்ஸ் மேலாளராக ஆதிலங்கம் பணியாற்றினார். அந்த சமயத்தில் மேலும் பல ப்ரீலான்ஸர்களுடன் நான் ஒரே நேரத்தில் பணியாற்றினேன். பணியில் இருந்து சென்ற பின் அவருடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நான் வைத்து கொள்ளவில்லை. தற்போது வெளியாகியுள்ள செய்திகளை பார்க்கும் போது அதிர்ச்சி அடைந்தேன். ஊடகங்களை உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளை வெளியிட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.