ரவுண்டு கட்டப்பட்ட விஜய்…ஆள விடுங்க… தெறித்து வெளிநாட்டுக்கு ஓடிய பரிதாபம்…

0
Follow on Google News

விஜய் வெளிநாடு புறப்பட்ட புகைப்படம் தான் இணையத்தில் வெளியாகி வைரலானது. திடீரென விஜய் இவ்வாறு வெளிநாடு புறப்பட காரணம் என்ன என்று பலரும் விவாதிக்க தொடங்கிவிட்டனர். அக்டோபர் 18ஆம் தேதி விஜய் நடித்த லியோ படம் வெளியாக உள்ளது. அந்த படத்தின் சூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. எனவே தனது ஓய்விற்காக அவர் வெளிநாடு சென்றுள்ளார் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

மற்றொரு தரப்பினர் அரசியலில் விஜய் சமீப காலமாக முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். அவருடைய அரசியல் நகர்வுகள் அடுத்தடுத்த கட்டத்திற்கு விஜய் எடுத்து சென்றாலும் கூட, ஒரு நடிகருக்கான இமேஜை தவிர்த்து ஒரு அரசியல் தலைவராக மக்கள் மத்தியில் விஜய் இடம் பிடிக்க வேண்டும் என்றால், விஜய்யின் இருந்து மக்களின் எதிர்பார்ப்பு என்பது விஜய் தற்போது செய்து வருவதை விட பல மடங்கு முயற்சி எடுத்தால் மட்டுமே மக்கள் கவனத்தை பெற முடியும் என்கின்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் விஜய்யின் வலது கையாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் சினிமாவை கைவிட்டு விட்டு முழு நேரம் விஜய் அரசியலில் இறங்குமாறு நச்சரித்துக் கொண்டிருப்பதாக சினிமா துறையை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களிடமிருந்து கொஞ்சம் விலகி ஓய்வெடுத்துவிட்ட வரலாம் என்ற முடிவிலும் விஜய் வெளிநாடு சென்று இருக்கலாம் என ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் விஜய் அவருடைய மனைவி, மகன், மகள் மூவரும் வெளிநாட்டில் இருப்பதாக அவர்களைப் பார்ப்பதற்காக விஜய் சென்று இருக்கிறார் என்று கூறி வருகின்றனர். இப்படி விஜய் வெளிநாடு பயணம் குறித்து ஆளாளுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கருத்துக்களை ஒரு பக்கம் தெரிவித்து வருகையில், இவை அனைத்தையையும் விட விஜய் வெளிநாடு பயணம் குறித்த மற்றொரு காரணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றிருந்த ஹூம்கும் பாடலில் விஜய்யை சரமாரியாக தாக்கும் பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொள்ள விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் நெல்சன் விஜய்யின் முந்தைய படமான பீஸ்ட் படத்தை எடுத்துள்ளதால் விஜய் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்துள்ளனர்.

ஏற்கனவே அந்த படத்தில் இடம் பெற்ற பாடலின் மூலம் பல விமர்சனங்களை கண்ட விஜய், ஆடியோ லாஞ்சில் இருந்து எஸ்கேப் ஆவதற்காக வெளிநாடு சென்றதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த விஷயம் தான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நஜெய்லர் ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் பேசும் போது சொன்ன வார்த்தைகள் விஜய் ரசிகர்களை பலமாக குத்திக் கிழித்துள்ளது.

ஜெயிலர் படத்தின் கதை கேட்டேன் பிடித்துப் போனது. அதன் பின்னர் ஒரு ப்ரோமோ வீடியோவையும் நெல்சன் மற்றும் அனிருத்துடன் சேர்ந்து எடுத்தேன், அதனை நீங்க பார்த்துருப்பீங்க, அப்புறம் பீஸ்ட் ரிலீஸ் ஆகுது. ஆனால், பீஸ்ட்டுக்கு நல்ல ரிவ்யூ வரல, ஒப்பினியனில் படம் அடிவாங்கிடுச்சுன்னு சொன்னாங்க, இனிமேலும், நெல்சன் நமக்கு வேண்டுமா சார் என எனக்கு தெரிந்த பல விநியோகஸ்தர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கேட்டாங்க..

ஆனால், ஒரு நல்ல இயக்குநர் எப்போதும் தோற்றுப் போக மாட்டார், அவர் செய்த சப்ஜெக்ட் தோற்றுப்போகலாம், அதற்கு சரியான ஆட்களை கேஸ்ட் பண்ணலைன்னா அந்த படம் தோல்வியடையும் என ரஜினிகாந்த் பீஸ்ட்டை ஜெயிலர் ஆடியோ லாஞ்ச் ஸ்டேஜில் மொத்தமாக ரோஸ்ட் செய்து விட்டார்.