விஜய் எங்களுக்கு வேண்டாம்… சங்கீதா பக்கம் நின்ற இரண்டு குழந்தைகள்… தரமான சம்பவம் செய்த ஜோசன் சஞ்சய்…

0
Follow on Google News

நடிகர் விஜய் சினிமாவில் வெற்றிக்கொடி கட்டி பறந்தாலும் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு குடும்பத் தலைவனாக ஒரு பெண்ணுக்கு கணவனாக பிள்ளைகளுக்கு தகப்பனாக ஜெயித்தாரா என்று கேட்டால் இல்லை என்பதை ஒவ்வொரு தவெக தொண்டனும் தளபதி ரசிகனும் தலைகுனிந்து ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

அவரது பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா ஆகியோருடன் அவர் கொண்டிருக்கிற உறவில் இணக்கம் எப்படி உள்ளது, அதே போல் குடும்ப வாழ்க்கையில் 27 ஆண்டுகளாக மனைவியாக உள்ள சங்கீதாவுடன் அவரது திருமண வாழ்க்கை என்ன என்பது அதிர்ச்சியை தான் தந்துள்ளது.

பல ஆண்டுகளாகவே தந்தை எஸ்ஏ சந்திரசேகருடன் விஜய் பேசுவதில்லை. விஜயை பார்க்க நீலாங்கரை பங்களாவுக்கு ஷோபாவும் எஸ்ஏ சந்திரசேகரும் வந்தாலும் அப்பா காரில் காத்திருக்க அம்மாவுக்கு மட்டுமே உள்ளே வர அனுமதி கிடைக்கும். விஜயின் உத்தரவு தான் அது. அப்பாவுடன் பேசு என்று அம்மா பலமுறை மன்றாடி கேட்டும் நோ என்று சொன்னவர்தான் விஜய்.

தவெக கட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும் அப்பா எஸ்ஏ சந்திரசேகர், அம்மா ஷோபா சந்திரசேகர் கூட யாரோ சிறப்பு விருந்தினர்களை போல தான் விழாவை வேடிக்கை பார்ப்பார்களே தவிர அவர்களை தனது ரத்த உறவாக மேடை ஏற்றி விஜய் அழகு பார்த்ததும் இல்லை. தவிர அரசியல் அனுபவமும் சிறந்த புத்திசாலி இயக்குனருமான தனது தந்தைக்கு கட்சியில் எந்த பதவியும் தராமல் விஜய் ஒதுக்கி வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

பெற்ற தாய் தந்தைக்கு தான் விஜய் இப்படி ஒரு சிம்ம சொப்பனம் என்றால் இப்போது மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய் மகள் திவ்யா சாஷா ஆகியோருடன் விஜய் கொண்டிருந்த உறவின் லட்சணமும் இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது. 2021 ஏப்ரல் முதல் தங்கள் உறவில் அந்த நடிகையால் விரிசல் என்ற நிலையில் ஒரே வீட்டில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சங்கீதா விவாகரத்து மனுவில் தெளிவாக சொல்லி விட்டார்.

ஒரு வீட்டில் இருந்தும் மனைவியை கண்டுக்காமல் அலட்சியப்படுத்திய விஜய், பெற்ற மகனை தனது ஒரே ஆண் வாரிசை கண்டுகொண்டாரா என்றால் அதுவும் இல்லை. திரைப்பட இயக்குனராக வேண்டும் களத்தில் குதித்த விஜய் மகனுக்கு உதவியது யார் என்றால் நடிகர் அஜீத்குமார்தான். அவர்தான் லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்திடம் சொல்லி அந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று சிபாரிசு செய்திருக்கிறார்.

மேலும் சிம்கா படத்தில் பிஆர்ஓவாக பணியாற்ற தனது மேனேஜர் சுரேஷ் சந்திராவையும் அனுப்பி வைத்திருக்கிறார். எப்போது என்ன உதவி வேண்டுமானாலும் என்னை கேள் தம்பி என்று அன்பாகவும் சொல்லி இருக்கிறார். ஆனால் தனது மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் துவக்க விழா பூஜைக்கு கூட விஜய் எட்டிப் பார்க்கவில்லை. மேலும் படப்பிடிப்பு தளத்துக்கு கூட ஒருமுறை வந்து தனது மகனுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தவில்லை.

அம்மாவை ஏமாற்றிய அப்பாவை எந்த பிள்ளையும் ஏற்கவோ மன்னிக்க மாட்டார்கள். ஏனெனில் பெற்ற தாயின் வேதனையை கண்ணீரை எந்த மகனும் ஏற்க மாட்டார்கள். நடிகை விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அப்பா விஜயை அன்பாலோ செய்திருக்கிறார் ஜேசன் சஞ்சய். தமிழகமே தளபதி தளபதி என்று கொண்டாடும் விஜயை வேண்டாம் என்று பெத்த மகனே புறக்கணித்து இருப்பது பெரிய அளவில் இப்போது கவனம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here