துரோகி வடிவேலு .. நன்றி கெட்டவன்..! ராஜ்கிரண் கடும் கோபம்.. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் வடிவேலு முன்னணி காமடி நடிகராக இருந்து படத்தின் ஹீரோவுக்கு போட்டியாக ஒரு காலத்தில் வலம் வந்தவர், முதலில் வடிவேலு கால் சீட் வாங்கிட்டு அடுத்து ஹீரோ கால் சீட் வாங்கிய சுழலும் இருந்தது, அந்த அளவுக்கு மிக பெரிய உச்சத்தில் இருந்தவர் நடிகர் வடிவேலு. ஆனால் நிலை உயரும் போது பணிவு வேண்டும் தோழா என்கிற தத்துவ பாடலுக்கு ஏற்ப நடந்து கொள்ளாமல். உச்சத்திற்கு சென்றதும் வடிவேலுக்கு ஆணவமும் தலைக்கு ஏறியது.

தொடர்ந்து இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிக பெரிய சரிவை சந்தித்து சினிமாவில் காணாமல் போன வடிவேலு. தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். வடிவேலுவின் ரீ என்ட்ரி எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது, அவரின் நடிப்பில் வெளியாக இருக்கும் படங்கள் திரைக்கு வந்த பின்பு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை பொருத்து தான் அமையும்.

இந்நிலையில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது. சில வருடம் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் இருந்த வடிவேலு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு ஆணவம் இன்னும் குறையவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது அவர் நடிக்கும் படத்தின் இயக்குனர் வேண்டுகோளுக்கு இணங்க ஆணவத்தை சற்று குறைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வடிவேல் – ராஜ்கிரண் இடையில் நடந்த ஒரு சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. மதுரையில் இருந்து வடிவேலுவை அழைத்து வந்தவர் ராஜ்கிரண். அவரது அலுவலகத்தில் ஆபிஸ் பையனாக வேலை செய்து வந்த வடிவேலுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பை அமைத்து கொடுத்தவர் வடிவேலு. இதன் பின்பு அடுத்தடுத்து சினிமாவில் நடித்து உச்சகட்ட காமெடி நடிகரானார் வடிவேலு. அதே சூழலில் தயாரிப்பு நிறுவனம் நஷ்டம் அடைந்து நெருக்கடியில் இருந்து வந்தார் ராஜ்கிரண்.

அப்போது ராஜ்கிரண் பணப்பிரச்சனையில் இருப்பதை தெரிந்து கொண்ட வடிவேலு, சில லட்சங்கள் கொடுத்து உதவி செய்துள்ளார். ஆனால் செய்த உதவியை வெளியில் தம்பட்டம் அடிப்பது போன்று. ராஜ்கிரண் மிக பெரிய கஷ்டத்தில் இருக்கிறார். நான் தான் பண உதவி செய்துள்ளேன் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்க. இந்த செய்தி பரவலானது. இது ராஜ்கிரணுக்கு மிக பெரிய அவமானத்தை சினிமா வட்டாரத்தில் பெற்று தந்தது.

அப்போது ராஜ்கிரண் தனக்கு நெருக்கமானவர்களிடம் நான் வடிவேலுவிடம் பணம் கேட்கவில்லை அவனாக வந்து பணம் கொடுத்தான். அதை வெளியில் அனைவரிடம் தெரிவித்து என்னை அசிக்கப்படுத்தி விட்டான், என அலுவலக்தில் ஆபீஸ் பையனாக இருந்தவன். துரோகி …நன்றி கொட்ட தனமாக இப்படி செய்து விட்டான் என ராஜ்கிரண் தெரிவித்ததாக சினிமா துறையை சேர்ந்த முக்கிய பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உன் பண திமிரை யாரிடம் காட்டுகிறாய்…. நயன்தாராவிடம் அசிங்கப்பட்ட லெஜெண்ட் சரவணா..