சிம்புவுக்கு பொண்ணு கேட்ட டி.ராஜேந்தர்…. அவமானபட்டு திரும்பிய சம்பவம்… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், என தமிழ் சினிமாவில் பண்முக திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். நடிகைகளை தன்னுடைய படத்தில் தொடாமல் நடிக்க கூடியவர் டி ராஜேந்தர். பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஒரு காலத்தில் சவால் விட்டுக் கொண்டிருந்த இவருக்கு சிலம்பரசன், குறளரசன் என்ற மகன்கள், இலக்கியா என்ற மகளும் உள்ளனர்.

இலக்கியா, குரலரசன் இருவரும் திருமணம் செய்து செட்டிலாகி உள்ளனர். ஆனால் மூத்த மகன் சிலம்பரசனுக்கு 40 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏற்கனவே பல நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கி வந்த சிலம்பரசன், நயன்தாரா, ஹன்சிகா ஆகிய இரண்டு நடிகைகளை காதலித்து தோல்வியும் கண்டார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக சினிமாவில் மிகப்பெரிய சரிவை சந்தித்து தன்னுடைய மார்க்கெட்டை இழந்த சிலம்பரசன்.

சமீபத்தில் அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு படம் மிகப்பெரிய ஹிட் அடித்து, வீழ்ந்த அவருடைய மார்க்கெட்டை மீட்டெடுத்துள்ளது. தற்பொழுது அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி சினிமாவில் பிசியாக இருந்து வருகிறார் சிலம்பரசன். சமீபத்தில் அவருடைய தந்தை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அமெரிக்க சென்று சிகிச்சை அளித்து பின் குணமடைந்து சென்னை திரும்பி உள்ளார்.

40 வயதாகும் மகன் சிலம்பரசனுக்கு திருமணம் முடித்து வைக்கும் ஆசையில் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் டி ராஜேந்தர்.தன்னுடைய சொந்த ஊரான மயிலாடுதுறையில் அவர் சார்ந்த சமூகத்தில் உள்ள தொழிலதிபர்கள் வீட்டு பெண்ணை தனது மகனுக்கு மணமுடித்து வைக்க உறவினர்கள் மூலம் விசாரித்து வந்துள்ளார் டி.ராஜேந்தர்.

ஆனால் சினிமா துறையைச் சார்ந்தவர்களுக்கு பெண் இல்லை, மேலும் சிலம்பரசனுக்கு அதிக வயதாகி விட்டதால் பெண் கொடுக்கவும் தயக்கம் காட்டி வருகின்றனர். இருந்தும் தொடர்ந்து தனது உறவினர்கள் மூலம் பெண் பார்க்கும் முயற்சியை கைவிடாமல் ஈடுபட்டு வரும் டி ராஜேந்திரன். அவர் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் வீட்டாரிடம் தனது மகன் சினிமாவில் அதிகம் சம்பாதிக்கிறான், என்னுடைய சொத்துக்களும் அதிகமாக இருக்கிறது.

மேலும் எனது மகனை திருமணம் செய்து கொண்டால் சிலம்பரசன் மனைவி என்கின்ற மிகப்பெரிய அந்தஸ்து கிடைக்கும் என அவருடைய சமூகத்தைச் சார்ந்த ஒரு மிகப்பெரிய குடும்பத்திடம் பெண் கேட்டுள்ளார் டி ராஜேந்திரன். ஆனால் தகவல் சொல்லி அனுப்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் தன்னுடைய உறவினர் மூலம் அந்தப் பெண் வீட்டார்கள் என்ன சொன்னார்கள் என்ற தகவல் அறிய முயன்றுள்ளார் டி ராஜேந்தர்.

ஆனால் பெண் குடும்பத்தின் தரப்பில் இருந்து, எங்கள் குடும்பத்திற்கு மரியாதை தான் முக்கியம், காசு, பணம், புகழ் இருந்து என்ன செய்ய. வயதான அவருடைய மகனுக்கு, மேலும் பல நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கிய ஒருவருக்கு நாங்கள் பெண் தருவதாக இல்லை என மணமகள் வீட்டார் தரப்பில் இருந்து தகவல் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் டி.ராஜேந்திரனுக்கு மிக பெரிய அவமானம் ஏற்பட்டதாக வும் கூறப்படுகிறது.

தாய் ஐஸ்வர்யாவை எச்சரித்த மகன்கள்.. ஐஸ்வர்யா திமிரை எப்படி மகன்கள் அடக்கினார்கள் தெரியுமா.?