லட்சுமி ராமகிருஷ்ணன் கேவலமான செயல்… இவரின் கொடூரமான முகம் பற்றி உங்களுக்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் குணச்சித்திர வேடங்களில் பல படங்கள் தொடர்ந்து நடித்து வருகின்றவர். தன்னை ஒரு பெண்ணியவாதி என வெளிப்படுத்திக் கொள்ளும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்குனராக ஒரு சில படங்களை இயக்கி வருகின்றார். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு எந்த ஒரு வரவேற்பும் இல்லை என்றாலும் கூட, ஒரு சிறிய இடைவெளி விட்டு மீண்டும் இயக்குனராக படம் இயக்கி வருகின்றவர்.

குணச்சித்திர நடிகையாக பல படங்களில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்திருந்தாலும், அதே நேரத்தில் இயக்குனராக 5 படங்கள் வரை இயக்கியிருந்தாலும், தனியார் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கும் சொல்வதெல்லாம் உண்மை என்கின்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.

அறியாமையில் இருக்கும் ஏழைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை, தொலைக்காட்சியில் அமர வைத்து அவர்களிடம் பேசி அதை உலகிற்கு அம்பலப்படுத்தி, அவர்களை மேலும் அவமானப்படுத்தும் செயல்தான் சொல்வதெல்லாம் உண்மை என்கின்ற நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் செய்து வருகின்றார். இந்நிலையில் தன்னை ஒரு சமூக அக்கறையாளர், பெண்ணியவாதி என வெளிப்படுத்தும் லஷ்மி ராமகிருஷ்ணன் பற்றிய பலரும் அறியப்படாத ஒரு கொடூரமான முகம் தற்பொழுது வெளியாகி உள்ளது.

தற்பொழுது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் லஷ்மி ராமகிருஷ்ணன். இந்த படம் கிண்டியில் உள்ள BSNL அலுவலகத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பொதுவாக படப்பிடிப்பின் போது மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சாப்பிடுவதற்காக இடைவேளை விடப்படும். சில நேரங்களில் லாங் ஷூட்டிங் எடுத்துக் கொண்டிருக்கும்போது, ஒரே மூடில் அந்த காட்சியை எடுத்து முடிக்க வேண்டும் என்பதற்காக இடைவேளை இல்லாமல் படப்பிடிப்பு தொடரும்.

அப்பொழுது நான்கு பேர், ஐந்து பேராக சென்று சாப்பிட்டுவிட்டு வருவார்கள், இதனால் படப்பிடிப்பு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கும். இந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மதியம் 2 மணி வரை இடைவேளை இல்லாமல் படமாக்கப்பட்டு வந்துள்ளது. 2 மணியளவில் லஷ்மி ராமகிருஷ்ணன் கட் என்று தெரிவித்துவிட்டு கேரவன் உள்ளே சென்றுவிட்டார்.

அங்கே படப்பிடிப்பில் இருந்தவர்கள் இடைவேளை என நினைத்துக் கொண்டு அனைவரும் சாப்பிட சென்று விட்டனர். 10 நிமிடம் கழித்து கேரவனில் இருந்து வெளியே வந்த லட்சுமி ராமகிருஷ்ணன் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை மிகக் கடுமையாக திட்டியுள்ளார். நான் பிரேக் சொன்னேனா.? சாப்பிடத்தான் இங்க வந்தீர்களா.? என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை மிக கேவலமாக திட்டி உள்ளார்.

மேலும் உதவி இயக்குனர்களை பார்த்து, நீங்களும் ஆம்பளையா.? மீசை வச்சவன் எல்லாம் ஆம்பளையா.? என்று கடுமையாக திட்டியுள்ளார். உடனே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் பாதி சாப்பிட்டதுடன் எழுந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் பாதியில் எழுந்து வந்தபோது, பரவாயில்லை சாப்பிட்டு வாருங்கள் என்று கூட சொல்லாமல் லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்லவில்லை.

உடனே படப்பிடிப்பையும் தொடங்கி ஆக்சன் என தெரிவித்து விட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன் என கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த அந்த யூனிட்டும் செம்ம கடுப்பில், வேலை செய்வதே நன்றாக சாப்பிடுவதர்க்கு தான், ஆனால் அந்த சாப்பாட்டை கூட நிம்மதியாக சாப்பிட விடவில்லை லட்சுமி ராமாகிருஷ்ணன், அதனால் லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் படங்களில் பணியாற்றக் கூடாது என்கின்ற முடிவில் மொத்த யூனிட்டும் இருப்பதாக கூறப்படுகிறது.

பறிபோகிறது சூர்யாவின் தேசிய விருது… இந்திய அளவில் மிக பெரிய அவமானத்தை சந்திக்கும் சூர்யா..!