அலட்சியபடுத்திய சூர்யா… சந்தர்ப்பத்தை தக்க வைத்து கொண்ட அஜித்…வருத்தத்தில் சூர்யா..

0
Follow on Google News

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் படம் துணிவு. எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் துணிவு. இதற்கு முன்பு அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கியிருந்தார் வினோத். இதில் நேர்கொண்ட பார்வை மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. ஆனால் வலிமை எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இந்த நிலையில் வலிமை படம் தோல்வியால் இயக்குனர் வினோத்தின் சினிமா கேரியர் மிகப்பெரிய கேள்விக்குறியாகி விடும் என்பதால், அவருடைய திறமையை நன்கு அறிந்த அஜித் அவருக்கு உதவி செய்யும் வகையில் மீண்டும் அவருடைய இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வாய்ப்பை கொடுத்து துணிவு படத்தில் கமிட்டனார் அஜித்.

இந்த நிலையில் எச் வினோத் இயக்கிய முதல் படம் சதுரங்க வேட்டை மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து அப்போதே துணிவு படத்தின் கதையை தயார் செய்து தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவிடம் தெரிவிக்க அவர் சூர்யாவிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சூர்யா கதை பிரம்மாண்டமாக இருக்கு ஆனால் இந்த பையனை நம்பி எப்படி இவ்ளோ பெரிய படத்தை செய்ய முடியும் என்று நம்பிக்கை இல்லாமல் யோசித்து சொல்வதாக தெரிவித்துவிட்டார் சூர்யா.

இதன் எஸ் ஆர் பிரபு மூலம் சூர்யாவின் தம்பியை சந்தித்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதையைத் தெரிவித்து அந்தப் படத்தையும் இயக்கி முடித்துள்ளார் வினோத். தீரன் அதிகாரம் படம் மிக பிரம்மாண்டமாகவும் ஆச்சரியப்படும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது இந்த படத்தை பார்த்த நடிகர் சூர்யா, வினோத் இயக்கத்தில் ஒரு படம் பண்ணுவதற்காக முயற்சி செய்துள்ளார்.

அதற்குள் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தில் கமிட் ஆகிவிட்டார் வினோத் இப்படி அடுத்தடுத்து வலிமை, துணிவு எனத் தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தில் கமிட்டான வினோத், அவரால் சூர்யாவை வைத்து இயக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் துணிவு படத்தை முதன் முதலில் சூர்யாவிடம் தான் வினோத் தெரிவித்ததாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.