வெற்றிமாறனிடம் முகத்தில் அடித்தது போல் பேசிய சூர்யா…இந்த பக்கமே வர வேண்டாம்.. கைவிடப்படும் வாடிவாசல்..!

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் அறிவிப்பு வெளியான படம் வாடிவாசல், இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க இருப்பதாகவும், ஜிவி பிரகாஷ் இசை அமைக்க இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது, வெற்றிமாறன் தற்பொழுது நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கி வரும் விடுதலை படம் முடிந்ததும் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதே போன்று, சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்களை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு கமிட்டாகி இருந்தார் சூர்யா. ஆனால் சூர்யா இரண்டு படங்களை முடிந்து வந்த பின்பும் கூட வெற்றிமாறன் விடுதலை படத்தின் படப்பிடிப்பை முடிக்கவில்லை, ஆனாலும் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தின் ட்ரையல் சூட் நடத்தினர் வெற்றிமாறன்,

மேலும் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை சூர்யாவிடம் பழக வேண்டும் என்பதற்காக, சூர்யாவை தினமும் அந்த காளையுடன் பழக பயிற்சி கொடுக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்குவது போன்று தெரியவில்லை. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை தொடங்குவதற்கு முன்பு பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்து அதற்கான படப்பிடிப்பு பாதி முடிவடைந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற இருக்கிறது.

பாலா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா, இந்த படத்தை முடித்த உடன் வாடிவாசல் படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் முடிவில் இருந்து வந்துள்ளார், ஆனால் சுமார் இரண்டு வருடமாக விடுதலை படத்தை முடிக்காமல் இழுத்தடித்து வரும் வெற்றிமாறன், இவரிடம் சிக்கி பல பட வாய்ப்புகளை இழந்து மிக பெரிய வருவாயை இழந்துள்ளார் சூரி, அதே போன்று இந்த படத்தில் நடித்த விஜய் சேதுபதியிடம் அடிக்கடி மேலும் மேலும் தொடர்ந்து கால் சீட் கேட்டு தொந்தரவு செய்து வருகிறார் வெற்றிமாறன்.

இந்த இடைப்பட்ட வேலையில் ஆந்திராவில் இருந்து ஜூனியர் NTR ரிடம் இருந்து அவருடைய நடிப்பில் தெலுங்கு படம் ஒன்றை இயக்க வெற்றிமாறனுக்கு அழைப்பு வந்துள்ளது. இதற்காக பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. உடனே விடுதலை படத்தை பாதியிலே விட்டுவிட்டு தெலுங்கு படத்தை இயக்கிவிட்டு மீண்டும் வந்து விடுதலை படத்தை தொடங்கலாமா, அல்லது விடுதலை படத்தை முடித்துவிட்டு தெலுங்கு படத்தை இயக்கலாமா என்கிற யோசனையில் இருந்து வருகிறார் வெற்றிமாறன்.

இந்நிலையில் சமீப காலமாக வாடிவாசல் படம் குறித்து எந்த ஒரு அப்டேட் இல்லாமல் இருந்து வருகிறார் வெற்றிமாறன், மேலும் இவரிடம் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சிக்கி சின்னாபின்னமாகி வருவதை பார்த்து சூர்யா, தெரிந்தே கசாப்பு கடை காரனிடம் தலையை கொடுத்த கதையாக நம்ம நிலைமை மாறி விட கூடாது என்பதற்காக, வெற்றிமாறன் முகத்தில் அடித்தது போன்று நேரடியாக தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார் சூர்யா.

அதில், தற்பொழுது பாலா படத்தை முடித்துவிட்டு, சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் அதை முடித்துவிட்டு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஒரு படம் இப்படி அடுத்த இரண்டு வருடத்துக்கு பிசியாக இருப்பதால், என் பக்கம் இரண்டு வருடத்துக்கு வரவே வேண்டாம், இரண்டு வருடம் கழித்து வாடிவாசல் படத்தை தொடங்கலாம் என வெற்றிமாறனிடம் நேரடியாக சூர்யா தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், வாடி வாசல் படம் கைவிடப்படலாம் என்று கூறப்படுவது குறிப்பிடதக்கது.

ஒரே வீட்டில் தனுஷ் – ஐஸ்வர்யா அஜால் குஜால்… கள்ளகாதலர்கள் போல் கையும் களவுமாக மாட்டியது எப்படி.?