அஜித்தை ஏமாற்றிய ஹச்.வினோத்… யாருகிட்ட… செம்ம டென்ஷனில் அஜித் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றது. நடிகர் அஜித்குமாருக்கு ஒரு பழக்கம் உண்டு ஒரு இயக்குனரிடம் பணியாற்றும் பொழுது, அந்த படம் வெற்றி பெற்று, அந்த இயக்குனரின் அப்ரோச் பிடிந்திருந்தால் அதே இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பார்.

அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படம் வெற்றியை தொடர்ந்து வேதாளம் படத்தில் மீண்டும் இணைந்து நடித்தார், அதனை தொடர்ந்து மீண்டும் விவேகம் படத்தில் சிறுத்தை சிவா உடன் இணைந்தார்.ஆனால் விவேகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை, விவேகம் படத்துடன் சிறுத்தை சிவா சினிமா வாழ்கை முடிந்தது என சினிமா வட்டாரதத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், சிவா மீது உள்ள நம்பிக்கையில், மீண்டும் விஸ்வாசம் படத்திற்கான வாய்ப்பை கொடுத்தார் அஜித்.

விஸ்வாசம் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சினிமாவில் தன்னை தக்க வைத்து கொண்டு அடுத்து ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் சிறுத்தை சிவா. அந்த வகையில் மீண்டும் சிறுத்தை சிவாவுக்கு சினிமாவில் மறுவாழ்வு கொடுத்தவர் அஜித், இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படம் முடிந்த உடன், ஹெச்.வினோத் பைக் தொடர்பான வலிமை படத்தின் கதையை அஜித்திடம் சொல்ல, அந்த கதை பிடித்து போக மீண்டும் வலிமை படத்தில் ஹெச் வினோத்துக்கு வாய்ப்பு கொடுத்தார் அஜித்.

ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை, இருந்தும் ஹெச்.வினோத் சினிமா வாழ்க்கை பெரிய கேள்வி குறியாகிவிடும் என்பதால், ஹெச்.வினோத் மீது உள்ள நம்பிக்கையில் மீண்டும் ஒரு படம் அவருடைய இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் அஜித்.. இந்த படத்துக்கான படப்பிடிப்பு ஆந்திராவில் விறுவிறுப்பாக நடந்து வந்ததது, இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வந்து விட வேண்டும் என்பதற்காக இரவு பகல் என கால்சீட் கொடுத்து நடித்து வந்தார் அஜித்குமார்.

படத்தின் முதல் பாதி எடுக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் பாதி படப்பிடிப்பு தொடங்கியதும், ஹெச்.வினோத் மீது அஜித்துக்கு சந்தேகம் ஏற்பட்டது, ஏற்கனவே வலிமை படம் பல ஹாலிவுட் படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்த நிலையில், தற்பொழுது அஜித் நடிக்கும் புதிய படத்தின் இரண்டாம் பாதியில் பல இந்தி மற்றும் தமிழ் படங்களில் இருந்தே சிறு சிறு காட்சிகளை காப்பியடித்து வந்த விஷயம் அஜித்துக்கு தெரியவந்துள்ளது.

தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக அவசரம் கருதி ஹெச்.வினோத் காப்பியடிக்க தொடங்கியதாக கூறப்படும் நிலையில், இந்த செயல் அறிந்த அஜித்குமார், படம் தாமதம் ஆனால் கூட பரவாயில்லை, பிற படங்களில் இருந்து காப்பியடிக்க கூடாது என ஸ்டிக்டாக அஜித் தெரிவித்து விட்டு, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று, அங்கே பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படத்தின் இரண்டாம் பாகத்துக்கான காட்சிகளை தயார் செய்யும் பணிகளில் ஹெச் வினோத் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

என்ன டான்ஸ் இது.. இதுக்கு உனக்கு சம்பளம் ஒரு கேடா.. பிரபுதேவாவை அவமானப்படுத்தி அனுப்பிய பிரபலம்..!