மரணத்திற்கு முன்பு கடுமையான மனஉளைச்சலில் மீனா கணவர்… மீனா கணவர் மரணத்தில் உள்ள மர்மம்..!

0
Follow on Google News

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மீனா, 90களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக இருந்த மீனா, அந்த காலகட்டத்தில் இரண்டு மொழி சூப்பர் ஸ்டார்களிடம் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சுமார் 10 வருடங்கள் தொடர்ந்து பிசியான நடிகையாக இருந்து வந்த நடிகை மீனா வருடத்துக்கு சுமார் 10க்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

கடந்த 2009ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் வித்தியாசகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா, பெங்களூரில் சொந்தமாக ஐடி கம்பெனி ஒன்றை நடத்திவரும் வித்தியாசகர் கோடீஸ்வரர் என்று கூறப்படுகிறது. அதே போன்று நடிகை மீனாவும் வசதியாக தான் இருக்கிறார், இப்படி இருவரும் வசதியாக இருக்கையில் திருமணத்துக்கு பின்பு மீனா சினிமாவில் நடிக்க வேண்டாம் என அவருடைய கணவர் தெரிவித்தததாக கூறப்படுகிறது.

ஆனால் திருமணத்துக்கு பின்பு தமிழ் படங்களில் மீனா நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இந்நிலையில் மீனா அவருடைய மகள் நானிக்காவை விஜய் நடித்த தெறி படத்தில் நடிக்க வைப்பதற்கு முன்பு அவருடைய குடும்பத்தில் மீனா கணவர் மற்றும் மாமியார், மாமனார் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இருந்தும் எதிர்ப்பை மீறி தான் தன்னுடைய மகளை தெறி படத்தில் மீனா நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

தெறி படம் முடிந்ததும், இனி படத்தில் நானிக்கா நடிக்க கூடாது என படிப்பில் கவனம் செலுத்தட்டும் என மீனா குடும்பத்தினர் ஸ்டிக்ட் ஆக தெரிவிக்க, இதன் பின்பு நானிக்கா சினிமாவில் நடிக்கவில்லை, இருந்தும் மீனா கணவர் பேச்சை கேட்காமல் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்ததை தொடர்ந்து குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது, இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் மீனா கணவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மாமியார் மற்றும் மாமனார் உடன் இருப்பதால் தான் பிரச்சனை என்று பெங்களூரில் இருந்து சென்னை வந்த மீனா கணவரையும் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார், பெங்களூரில் படித்து வந்த மகளை சென்னைக்கு மாற்றியுள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கடுமையாக மனஉளைச்சலில் இருந்து வந்த மீனா கணவர்ருக்கு குறிப்பாக தன்னுடைய மனைவி மலையாள நடிகர் மோகன்லால் உடன் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தது.

மேலும் மோகன்லால் உடன் நெருக்கமாக நடித்து வந்தது மிகுந்த வேதனையை தந்துள்ளது இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார் மீனா கணவர் வித்யாசாகர், மன உளைச்சலில் ஏற்கனவே இருந்து வந்த வித்யாசாகருக்கு கொரோனா தோற்று வந்த பின்பு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் கணவர் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட மறுபக்கம் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வந்துள்ளார் நடிகை மீனா.

இதனை தொடர்ந்து கணவர் விருப்பத்துக்கு எதிராக மனைவி மீனா நடந்து கொண்டது தான் அவருடைய கணவர் வித்யாசாகரை கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், புறா எச்சத்தால் ஒருவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடும் என்பதெல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என மீனா கணவர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் தாய்லாந்தில் நடந்த உச்சக்கட்ட சண்டை… என்ன காரணம் தெரியுமா.?