அம்மா ப்ளீஸ் வேண்டாம்…. கையை பிடித்து கதறிய இரண்டு மகன்கள்… தாய் ஐஸ்வர்யா என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதியினர் தாங்கள் இருவரும் ஒருமனதாக பிரிவதாக அறிவித்து கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கணவர் தனுஷை விட்டு பிரிந்த ஐஸ்வர்யா சினிமாவில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இசை ஆல்பம் தயாரிக்கும் பணியில் ஆந்திராவில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே கணவரை விட்டு பிரிந்த ஐஸ்வர்யா பெரிய அளவில் விளம்பரம் செய்து, வெளியிடப்பட்ட அவர் தயாரித்த இசை ஆல்பம் தோல்வியை தழுவியது.

இதன் பின்பு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள ஐஸ்வர்யா தமிழில் ராகவ லாரன்ஸ் நடிப்பில் ஒரு படம் இயக்க உள்ளார். அதனை தொடர்ந்து இந்தியிலும் படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. சினிமாவில் தன்னை பிசியாக ஈடுபட்டுத்தி கொண்ட ஐஸ்வர்யா, தனது இரண்டு குழந்தைகள் பற்றி கண்டு கொள்வதே இல்லை என்று கூறப்படுகிறது. தன்னை ஒரு பிரபலமாக காட்டி கொள்ள வேண்டும் என்பதற்காகவே சினிமா துறையில் ஐஸ்வர்யா தன்னை ஈடுபடுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா குடும்பத்தில் பொறுப்பு இல்லாமல் நடந்து கொள்வது நடிகர் ரஜினிகாந்துக்கு பிடிக்கவில்லை என்றும், மேலும் மகள் குடும்பத்தில் பொறுப்பாக இரண்டு குழந்தைகளை வளர்த்தால் போதும் என்பது தான் ரஜினிகாந்த் விருப்பமும் கூட, இந்நிலையில் யாத்ரா – லிங்கா இரண்டு மகன்களுக்கும் தாய் ஐஸ்வர்யாவை விட தந்தை தனுஷ் மீது தான் அதிக பாசம் என்று கூறப்படுகிறது, இதற்கு காரணம் தாய் ஐஸ்வர்யா வெளிநாடு ஷாப்பிங், யோகா, பரதநாட்டியம், சினிமா இயக்குனர், இசை ஆல்பம் தயாரிப்பது என எதாவது தேவையின்றி செய்து கொண்டிருப்பார்.

இரண்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்ய மாட்டார் என்று கூறப்படுகிறது.ஆனால் தனுஷ் அப்படி இல்லை சினிமா படப்பிடிப்பு முடிந்து மற்ற நேரங்களில் தனது இரண்டு மகன்களுடன் அதிக நேரத்தை செலவு செய்து மகிழ்ச்சியாக இருப்பார் என்று கூறப்படுகிறது. பள்ளி விடுமுறை நாட்களில் தனது மகன்களுடன் எதாவது ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்று விடுவார் தனுஷ் என்றும், பெரும்பாலும் தனுஷ் குழந்தைகளுடன் செல்லும் போது ஐஸ்வர்யா உடன் செல்ல விரும்ப மாட்டார்.

ஐஸ்வர்யா குடும்பத்தில் இருப்பதை விட அவரின் தோழிகளுடன் வெளிநாடு ஷாப்பிங், பார்ட்டி என்பதையே அதிகம் விருப்பம் உள்ளவர். இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவிப்பதற்கு முன்பு சில மாதங்களாக இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்கள். இவர்கள் பிரிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தனது மகன்களுடன் அமெரிக்க செல்ல திட்டமிட்ட தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை அழைத்துள்ளார், ஆனால் ஐஸ்வர்யாவுக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் இரண்டு மகன்களுடன் அமெரிக்க பறந்தார் தனுஷ், இரண்டு நாள் கழித்து ஐஸ்வர்யா தானும் அமெரிக்கா வருவதாக தனுஷை தொடர்பு கொண்டு தெரிவித்து, கணவன் மற்றும் குழந்தைகளுடன் அவரும் இணைந்துள்ளார். இரண்டு நாட்கள் குடும்பத்துடம் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர், இரண்டு மகன்களும் அம்மா – அப்பா இருவருடன் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பது பெரிய சந்தோசத்தை கொடுப்பதாக அம்மா – அப்பா இருவரிடம் தெரிவித்துள்ளார்கள்.

அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்லும் வரை அம்மா எங்க கூடவே இருங்க என மகன்கள் தெரிவிக்க அதற்கு தாய் ஐஸ்வர்யாவும் ஓகே சொல்லியுள்ளார், ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் தனுஷ் – ஐஸ்வர்யா இடையே உரசல் ஏற்பட்டு இரண்டு மகன்கள் முன்பு இருவரும் சண்டையிட்டுள்ளனர், அப்போது உடனே நான் இங்கிருந்து இந்தியாவுக்கு போகிறேன் என ஐஸ்வர்யா கிளம்பியுள்ளார். அப்போது தனுஷ் தலையில் கையை வைத்து கொண்டு ஏதும் பேசாமல் உட்கார்ந்துள்ளார்.

ஆனால், யாத்ரா மற்றும் லிங்கா இருவரும், அம்மா ப்ளீஸ் வேண்டாம் போகாதீங்க, என கதறியுள்ளார்கள், ஆனால் தன்னுடைய குழந்தைகள் விருப்பத்தை சிறிதும் புரிந்து கொள்ளாமல், குழந்தைகள் கையை தட்டிவிட்டு அங்கிருந்து இந்தியா புறப்பட்டார் ஐஸ்வர்யா என்று கூறப்படுகிறது. இதன் பின்பு அம்மா போனால் என்ன நம்ம ஜாலியாக இருப்போம் என்று இரண்டு குழந்தைகளுடன் மீதி நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்துள்ளார் தனுஷ்.

அண்ணே….மன்னிச்சுடுங்க…. பாலாவிடம் சரண்டரான சூர்யா..! இருவருக்கும் இடையில் நடந்தது என்ன தெரியுமா.?