கள்ள காதலனுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த கணவனை வாழைக்கு உரமாக்கிய மனைவி.!

0
Follow on Google News

கடலூர் : கணவன் மனைவியை கொல்வது என்ற காலம் மலையேறிப்போய் மனைவி கணவனை கொல்வது புது ட்ரெண்டாகி வருகிறது. இதனிடையே கடலூரில் நடந்த ஒரு சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குளாக்கியுள்ளது. கொலை கொள்ளை என தமிழகமே தத்தளித்து வரும்நிலையில் கள்ளகாதலால் ஏற்பட்ட ஒரு மரணம் மேலும் அதிர்ச்சியூட்டுவதாய் அமைந்துள்ளது.

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு எஸ் புதுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் தனது சொந்த சகோதரியின் மகளான விஜயலட்சுமி என்பவரை திருமணம் செய்துள்ளார். 18 ஆண்டுகளாக ஒன்றாக இருந்த தம்பதியினருக்குள் அடிக்கடி சண்டை நிலவி வந்துள்ளது. தங்கள் இருபிள்ளைகள் முன்பே சண்டையிட்டு வந்துள்ளனர். இதனால் ராஜசேகர் அடிக்கடி சண்டையிடும்போதெல்லாம் வெளியூர் சென்றுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சண்டையில் வெளியூருக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் ஒன்பது மாதங்களாக திரும்பவில்லை என கூறப்படுகிறது.இதையடுத்து விஜயலட்சுமியின் சகோதரர் சிவா ராஜசேகரை பற்றி விசாரித்துள்ளார். ராஜசேகரை கொன்று வாழைக்கு உரமாக்கிவிட்டதாக சிவாவிற்கு ஷாக் கொடுத்துள்ளார் விஜயலட்சுமி.

தகவல் போலீசாருக்கு பறக்க பண்ருட்டி காவல்துறையினர் வருவாய்துறையுடன் விஜயலட்சுமி வீட்டிற்கு விரைந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. ராஜசேகர் அடிக்கடி சண்டைபோட்டுக்கொண்டு வெளியூர் செல்கையில் அதேபகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் கள்ளப்பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவல் ராஜசேகருக்கு தெரிந்து கண்டித்திருக்கிறார். மேலும் விஜயலட்சுமியின் கள்ளக்காதல் தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில்தான் மோகனுடன் உல்லாசமாக இருக்கும்போது கணவரிடம் கையும்களவுமாக பிடிபட்டுள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்து வாழைத்தோட்டத்தில் புதைத்துள்ளனர். தற்போது இருவரையும் கைதுசெய்து போலீசார் சிறையிலடைத்துள்ளனர்.