பணத்தை எடுத்துட்டு கிளம்பு… இந்தி நடிகையிடம் அசிங்கப்பட்ட லெஜெண்ட் சரவணன்.. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என நினைத்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணா சில இடங்களில் பணத்தால் எதையும் செய்து விட முடியும் என்பது தவறு என்று உணரும் வகையில் சில சம்பவம் அவர் வாழ்க்கையில் நடந்து வருகிறார். தமிழகத்தில் தன்னுடைய கடின முயற்சியால் சரவணா ஸ்டோர்ஸ் என்கிற பெயரில் பல்வேறு கிளைகளை தொடங்கியுள்ளார் அதன் உரிமையாளர் லெஜெண்ட் சரவணா, தமிழகத்தில் முக்கிய தொழில் அதிபர்களின் ஒருவராக இருந்து வருகிறார்.

தன்னுடைய கடையின் விளம்பர படங்களில் ஆரம்பத்தில் அந்த காலகட்டத்தில் இருக்கும் முன்னணி நடிகைகளை நடிக்க வைத்து விளம்பரம் செய்து வந்தார். சில நடிகைகள் விளம்பர படங்களில் நடிக்க தயங்கினால் கூட சம்பளத்தை அதிகப்படுத்தி நடிக்க வைத்து விடுவார். ஒரு கட்டத்தில் தன்னுடைய கடை விளம்பரத்தில் அவரே நடிக்க தொடங்கினார். அதுவும் முன்னணி நடிகையுடன் அண்ணாச்சி விளம்பர படங்களில் செம்ம ஆட்டம் போடுவார்.

அஜித், விஜய் என முன்னனி நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகள் அதிக சம்பளம் கிடைப்பதால் சிறிதும் தயக்கமின்றி லெஜெண்ட் சரவணன் உடன் விளம்பர படங்களில் நடித்தனர்.இதன் பின்பு சினிமா மீது கொண்ட ஆசையில் படம் நடிக்க விரும்பிய லெஜெண்ட் சரவணன் அவரே சொந்த தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் அதிக பண செலவில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவருடைய விளம்பர படத்தை இயக்கியவர் தான் இயக்குகின்றனர்.

தன்னுடைய புதிய படத்தில் எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, முன்னனி நடிகர்கள் மற்றும் நடிகைகள், பிரபல டெக்னீஷன்கள் இடம் பெறுவதில் உறுதியாக இருந்தார், அந்த வகையில் தன்னுடன் லெஜெண்ட் படத்தில் முதலில் ஜோடியாக நடிக்க நயன்தாரா உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.ஆனால் நயன்தாரா அவருடன் நடிக்க மறுத்து விட்டார். இருந்தாலும் அண்ணாச்சி விடுவதாக இல்லை.

அதிக பணம் தருகிறோம் இந்த படத்தில் நீங்கள் நடிங்க வேண்டும் என நயன்தாராவிடம் நேரடியாக சென்று பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் தெரிவிக்க அதற்கு மரியாதையாக வெளியே போங்க என்று அசிங்கப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார் நயன்தாரா என்று கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பல நட்சத்திர நடிகைகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு மட்டும் சுமார் 7 கோடி வரை செலவானது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு இந்தி நடிகை கத்ரினா கைப் பங்கேற்க ரூபாய் 2.5 கோடி சம்பளம் பேசப்பட்டு அதற்கான பணமும் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் கடைசி நேரத்தில் இந்த ஆடியோ நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது. நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என கத்ரினா கைப் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் லெஜெண்ட் சரவணன் தரப்பில் இருந்து கூடுதலாக பணம் தருகிறோம் நீங்க கண்டிப்பாக வாங்க என்று டார்ச்சர் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் டென்ஷன் ஆன கத்ரினா கைப் உங்க பணத்திமிரை என்னிடம் காட்ட வேண்டாம் என்று கொடுத்த பணம் என்று திருப்பி கொடுத்த கத்ரினா கைப், என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

நள்ளிரவில் நடிகையின் டார்ச்சர் தாங்க முடியமால் அஜித் எடுத்த அதிரடி முடிவு..! என்ன செய்தார் அஜித் தெரியுமா.?