செல்வராகவன் படத்தில் இருந்து பாதியில் வெளியேறிய சிவகார்த்திகேயன்..! எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

கஸ்தூரி ராஜா மூத்த மகன் இயக்குனர் செல்வராகவன், இவர் யாரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்தது கிடையாது, தனது தந்தை கஸ்தூரி ராஜா மூலம் கற்று கொண்ட சினிமா அனுபவங்களை வைத்து துள்ளுவதோ இளமை படத்தில் இயக்குனரானார் செல்வராகவன், இந்த படத்தின் இயக்குனர் கஸ்தூரி ராஜா என பெயரிடப்பட்டாலும், துள்ளுவதோ இளமை படத்தில் முழுவதும் இயக்குனராக பணியாற்றியது செல்வராகவன் தான் என்பது குறிப்பிடதக்கது.

அதன் பின்பு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து உச்சத்தில் இருந்த செல்வராகவன் முன்னனி இயக்குனர் வரிசையில் இடம் பிடித்தார். ஆனால் செல்வராகவனின் குணாதிசயம் என்ன என்பதை அவரிடம் இணைந்து பணியாற்றியவர்களால் கூட புரிந்து கொள்ள முடியாது, தனது உதவி இயக்குனர்களை அழைத்து அவர்கள் நடுவில் அமர்ந்து பேசி கொண்டே சாப்பிடும் செல்வராகவன், உதவி இயக்குனர்கள் சாப்பிட்டார்களா என்று கூட கேட்க மாட்டார்.

சாப்பிட்டு முடித்த பின்பு என்னப்பா நீங்கல்லாம் இன்னும் சாப்பிடவில்லையா.? போங்க சாப்பிட்டு வாங்க என செல்வராகவன் கூறுவாராம். இப்படி ஒரு வித்தியாசமான குணாதிசயம் கொண்ட நபர் செல்வராகவன், இந்நிலையில் தனது படத்தின் முழு கதையை எப்போதும் அந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளிடம் சொல்ல மாட்டார் செல்வராகவன் என கூறப்படும் நிலையில் படத்தின் கதையின் சுருக்கத்தை மட்டும் கூறுவாராம்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சியில் பிரபலமான அந்த நேரத்தில்,அதுவரை சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த காலகட்டத்தில், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் ஹீரோவுக்கு நண்பராக நடிக்கும் வாய்ப்பை செல்வராகவன் அளித்துள்ளார், இதனை தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு தளத்துக்கு ஆஜரானார். ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு காட்டு பகுதியில் நடைபெற்றது.

தனது படக்குழுவினருடன் காட்டு பகுதிகளுக்கு சென்ற செல்வராகவன், இந்த இடம் நல்லா இருக்கும் இங்க ஒரு காட்சியை எடுப்போம் என எடுத்துவிட்டு, அடுத்து இதே மாதிரி பிற இடங்களை தேடி செல்வது, அங்கே ஒரு காட்சி இப்படி ஒரு திட்டமிடல் இல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு நடந்து வந்துள்ளது, சிவகார்த்திகேயன் படக்குழுவினருடன் பயணித்து கொண்டே இருக்கிறார் ஆனால் அவருக்கான காட்சிகள் படமாக்கப்படவில்லை.

இந்நிலையில் சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் வந்த சிவகார்த்திகேயன், அதுவரை இந்த படத்தில் நடித்தவர்கள் படும் அவஸ்தைகளை கண்டு , இந்த இயக்குனரிடம் சிக்கினால் சின்னா பின்னமாகி விடுவோம் என்று சொல்லாமல் கூட படப்பிடிப்பு தளத்தில் இருந்து தெறித்து ஓடியதாக கூறப்படுகிறது, இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்கள் கழித்து சிவகார்த்திகேயன் எங்கே அவருக்கான காட்சிகள் படமாக்கப்பட்ட இருக்கிறது என இயக்குனர் செல்வராகவன் தேட.

அதற்கு அந்த பையன் ஓடி இரண்டு நாளாச்சு என உதவி இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி எந்த ஒரு திட்டமிடல் இல்லாமல் செயல்பட்டு, அவர் படத்தில் வேலை செய்பவர்களை படம் முடிவதற்குள் பைத்தியமாக்கி விடுவார் செல்வராகவன் என சினிமா வட்டாரத்தில் கூறப்படும் நிலையில், இவர் ஒரு சைக்கோ இயக்குனர் என்று கூட செல்வராகவனை சினிமா வட்டாரத்தில் அழைப்பது கூறிப்பிடத்தக்கது.