ரஜினியை ஓட விட்டவங்க நாங்க… சூர்யா உனக்கு இருக்குடி.! பீதியில் இருக்கும் சூர்யா… என்ன சம்பவம் தெரியுமா.?

0
Follow on Google News

சந்தன கடத்தல் வீரப்பன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ரஜினிகாந்த் பேசியதாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் ரஜினிகாந்த் இடையில் கடந்த இருவது வருடங்களுக்கு முன் கடும் மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பல இடங்களில் ரஜினி ரசிகர்கள் மற்றும் பாமகவினர் இடையே அடிதடி கூட நடந்தது, பாமகவுக்கு துணையாக வன்னியர் சங்கம் இருந்ததை தொடர்ந்து வட மாவட்டங்களில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான பாபா படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் சூறையாடப்பட்டது. பல திரையரங்குகளில் ரீல் பெட்டிகளை பாமகவினர் தூக்கி கொண்டு சென்றுவிட்டனர், இதனால் பாபா படம் மிக பெரிய தோல்வியை சந்தித்து நஷ்டம் அடைந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கும் சூழலுக்கு ரஜினிகாந்த் தள்ளப்பட்டார், இந்நிலையில் இதே போன்ற சம்பவம் ஓன்று தற்போது அரங்கேறி வருகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வந்த படம் ஜெய்பீம், இந்த படத்தில் வன்னிய சமூகத்தை தவறாக சித்தரிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, கடும் எதிப்பு கிளம்பியது, இதனால் பாமகவினர் மற்றும் வன்னிய சங்கத்தினர் சூர்யாவுக்கு எதிராக கடும் கண்டனத்தை பதிவு செய்தவர்கள், சூர்யா புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தினர், பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் அப்போதே நடிகர் சூர்யா இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்கும், ஆனால் தன் பக்கம் எந்த ஒரு தவறும் இல்லை என்பது போன்று, படத்தில் இடம் பெற்ற சம்பவங்களை நியப்படுத்தி தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வந்ததை தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினரை கொந்தளிக்க செய்தது, இதனை தொடர்ந்து அடுத்து சூர்யா படம் வெளியாகும் போது நாங்கள் யார் என்பது புரியும் என எச்சரித்தனர் எதிர் தரப்பினர்.

இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கியுள்ள எதற்கும் துணித்தவன் திரைப்படம் வரும் மார்ச் 10ம் தேதி வெளிவர இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பாமக மற்றும் வன்னிய சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், வீரப்பனை தவறாக பேசியதற்கு சூப்பர் ஸ்டாரை அன்றே ஓட விட்டோம், .வன்னியர் சமுதாயத்தின் அடையளத்தை இழிவுபடுத்திய சூர்யா படத்திற்கு சிறப்பபான சம்பவம் செய்ய காத்துகொண்டுள்ளோம் என சமூக வலைதளத்தில் பலர் எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் பதிவு செய்துள்ளது நடிகர் சூர்யா பீதியில் உள்ளதாக கூறப்படுகிறது.