சிம்புவின் ப்ராடுத்தனம்.. உண்மையை உடைத்த ஜெயம் ரவி.. பொன்னியின் செல்வன் படத்தில் சிம்புவுக்கு நடந்தது என்ன.?

0
Follow on Google News

சோழ மன்னர்களின் வரலாற்று கதையை மையமாக வைத்து மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாநாடு, இந்த படத்திற்கு முன்பு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் என்கின்ற படத்தில் சிம்பு நடித்தார்.

அப்போது, அடுத்து மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முதல் முதலில் அந்தப் படத்தில் கமிட்டான நடிகர் சிம்பு. ஆனால் அடுத்தடுத்து நடிகர்கள் தேர்வின் பொழுது, நடிகர் ஜெயம் ரவி மற்றும் விக்ரம் இருவரிடம் இயக்குனர் மணிரத்தினம் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் ஏற்கனவே இந்த படத்தில் சிம்பு கமிட்டான விஷயம் ஜெயம் ரவி மற்றும் விக்ரம் இருவருக்கும் தெரியவந்துள்ளது.

இந்த படத்தில் சிம்பு நடித்தால் நாங்கள் இருவரும் நடிக்க மாட்டோம் என்று ஜெயம் ரவி மற்றும் விக்ரம் இருவரும் மறுத்துவிட்டனர். இதன்பின்பு சிம்பு பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்பு தான் ஜெயம் ரவி மற்றும் விக்ரம் இருவரும் இந்த படத்தில் கமிட்டாகி உள்ளனர். இந்த தகவலை பிரபல சினிமா துறையைச் சார்ந்த பத்திரிகையாளர் ஒருவரிடம் சிம்பு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.

அந்த பத்திரிக்கையாளர் சிம்பு சொன்னதாக சொல்லாமல் எங்களுக்கு வந்த தகவலின் படி என்று, விக்ரம் மற்றும் ஜெயம் ரவியால் சிம்பு பொன்னியின் செல்வன் படத்தில் வெளியேற்றப்பட்ட காரணத்தை அம்பலப்படுத்தினால். இந்த விஷயம் மிக பரவலாக பரவிய நிலையில், சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பத்திரிகையாளர் போது ஜெயம் ரவியிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஜெயம் ரவி இது தவறான தகவல், சிம்புவே எனக்கு கால் செய்து, இந்த படத்தில் நீங்கள் நடிப்பதில் எனக்கு உண்மையில் மிகப்பெரிய சந்தோசம் என தெரிவித்தார், அதனால் இஇது போன்று, உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசி வருவார்கள் அதில் உண்மை இல்லை என்று ஜெயம் ரவி தெரிவித்தார். இது குறித்து சம்பந்த பட்ட பத்திரிகையாளர் கூறுகையில்.

சிம்பு தொலைபேசியில் தன்னை தொடர்பு கொண்டு வபொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அதற்கான காரணத்தை தொலைபேசியில் சொன்ன தகவல் உண்மைதான் என்று பிரபல பத்திரிகையாளர் மீண்டும் அடித்து கூறியுள்ளார்.; இந்த நிலையில் சுய விளம்பரத்துக்காக சிம்பு சொன்னது பொய்யாக இருக்கலாம். இந்நிலையில் ஜெயம் ரவி உண்மையை போட்டு அம்பலப்படுத்தியதால் சிம்பு தப்பிக்க முடியாமல் அந்தர் பல்டி அடித்து வருகிறார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது