சொந்த காசில் சூனியம் வைத்த உதயநிதி… இயக்குனர் சங்கருக்கு கடும் நெருக்கடி… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

சங்கர் இயக்கத்தில் 90களில் வெளியான படம் இந்தியன். இந்த படம் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்டது. மிகப் பிரம்மாண்டமாக அதிக செலவில் இந்த படத்தை சங்கர் எடுத்திருப்பார். இந்தியன் படத்திற்கு பின்பு தான் பிரமாண்ட இயக்குனர் என்கிற பெயரை பெற்றார் சங்கர். இது மிகப்பெரிய ஹிட் கொடுத்தது இந்த நிலையில். இந்தியன் படத்தின் பார்ட் 2, லைக்கா தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் படப்பிடிப்பை தொடங்கினார் சங்கர்.

ஆனால் இந்த படத்தில் இயக்குனர் சங்கர் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் படப்பிடிப்பு பாதியிலே நின்றது. நீண்ட காலமாக இந்த படம் மீண்டும் தொடங்கப்படுமா.? என்கின்ற சந்தேகம் பலருக்கு இருந்த நிலையில், இந்தியன் 2 படத்திற்கு உள்ளே உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ட்ரி கொடுத்தது.

இதன் பின்பு சங்கர் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு இடையில் நடந்த பிரச்சனையை பேசி சுமுகமாக தீர்த்து வைத்து, படப்பிடிப்பிற்கான வேலையை தொடங்குவதற்கு ஏற்பாடு செய்தார் உதயநிதி ஸ்டாலின். இந்த நிலையில் இந்தியன் 2 படம் இந்தியன் 1 போலவே லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பொதுப்பணித்துறை அலுவலகம், குடிசை மாற்று வாரியம் போன்ற அரசு அலுவலகங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் இடம் பெற்று இருப்பதால்,அரசு அலுவலகங்களில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக படப்பிடிப்பு நடத்த பெரும் உதவியாக இருந்துள்ளது. இந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் சங்கருக்கு கடும் நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளார். இந்தியன் 2 படம் லஞ்சம், ஊழலுக்கு எதிரானது மேலும் இந்த படம் பெரும்பாலும் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல் லஞ்சத்திற்கு எதிராக படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படம் வெளியானால் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தும் மேலும் இது திமுக அரசுக்கு எதிரான படமாக அமைந்து விடும் என்பதால், கதையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இருந்து இயக்குனர் சங்கருக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த படத்தில் மையக் கருவே லஞ்சம்,ஊழலுக்கு எதிரானது தான் என்பதால், உதயநிதி சொல்வது போன்று படத்தில் மாற்றம் கொண்டு வருவது என்பது, கதையில் இருந்து ஒரு செங்கலை உருவினால் கூட மொத்த கட்டிடமும் சரிந்து விழுந்து விடும் என்பதால் மிகப்பெரிய குழப்பத்தில் இருந்து வருகிறார் சங்கர். இதனால் இந்தியன் படம் அடுத்தகட்டத்திற்கு நகர்வதில் மிக பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.