மூன்று நடிகைகளை காதலித்த சரத்குமார்.! ஒருவருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை.! யார் அந்த நடிகைகள் தெரியுமா.?

0
Follow on Google News

வில்லன் நடிகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சரத்குமார், நாட்டமை படத்தின் நடித்ததற்கு பின்பு உச்ச நடிகராக தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர், சரத்குமார் நடித்த பெரும்பாலான படங்கள் குடும்ப படங்களாக அமைந்தது, சரத்குமார் முதல் மனைவி சாயா, இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உண்டு, அதில் ஒருவர் தான் நடிகை வரலக்ஷ்மி, குழந்தைகள் சிறுவயதில் இருக்கும் போதே கருத்து வேறுபாடு காரணமாக சரத்குமார்-சாயா தம்பதிகள் பிரிந்தனர்.

இதனை தொடர்ந்து தண்னுடன் ஜோடியாக நடித்த நடிகைகளை காதலித்து வந்துள்ளார் சரத்குமார், 1992 காலகட்டத்தில் தசரதன், முன்னறிவிப்பு, பேண்ட் மாஸ்டர் , நம்ம அண்ணாச்சி என தொடர்ந்து நான்கு படங்களில் நடிகை ஹீரா உடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை சரத்குமார் அவரை காதலித்து வந்துள்ளார், ஆனால் சரத்குமார் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் சரத்குமார் காதலை நடிகை ஹீரா ஏற்று கொள்ளவில்லை என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது.

அதன் பின்பு சூர்யவம்சம், மூவேந்தர் படங்களில் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகை தேவயானியை காதலித்த நடிகர் சரத்குமார் அவரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார், ஆனால் நடிகை தேவயானி சரத்குமாரை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது, அதன் பின்பு நடிகை நக்மா மீது காதலில் விழுந்துள்ளார், சரத்குமார் நடிப்பில் வெளியான ரகசிய போலீஸ், அரவிந்தன், ஜானகிராமன் போன்ற படங்களில் ஜோடியாக நடித்தவர் நக்மா.

இதனை தொடர்ந்து சரத்குமார் காதலை நக்மா ஏற்றுக்கொள்ள இருவரும் சென்னையில் லிவிங் டு கெதர் வாழ்கை வாழ்ந்து வந்தததாக அப்போது செய்தி வெளியானது, சரத்குமார்-நக்மா ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், நக்மா சுதந்திரமாக இருக்க சரத்குமார் கண்டிஷன் போட ஆரம்பித்தார், ஒரு கட்டத்தில் நக்மா வெளியே நபர்களுடன் சென்றுவிட்டு இரவு தாமதமாக வந்துள்ளார்.

இதற்கு சரத்குமார் – நக்மா இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது, ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி எனக்கு கண்டிஷன் போட நீ யார்? என நக்மா ஆவேசமாக பேச, சரத்குமார் பளார் என நக்மாவை அறைந்ததாக கூறப்படுகிறது, அத்துடன் நக்மா தனது காதலை முறித்து கொண்டு சரத்குமாரை விட்டு விளக்கியுள்ளார், இதன் பின் நடிகை ராதிகாவை காதலித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார் சரத்குமார்.