ரஜினியை வெச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்… ஐயோ.. பாவம் ரஜினி ரசிகர்கள்..

0
Follow on Google News

கடந்த சில மதங்களாகவே சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து, ரஜினி மற்றும் விஜய் இருவருக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், சமீபத்தில் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், காட்டில் பெரிய மிருகங்களை எப்போதும் சிறிய மிருகங்கள் சீண்டிக் கொண்டே இருக்கும். காக்கா, கழுகை சீண்டிக் கொண்டே இருக்கும். கழுகு எப்போதும் அமைதியாக இருக்கும்.

கழுகை விட காக்கா உயர பறக்க நினைக்கும். ஆனால் அதன் இறக்கையை கூட காக்கா வால் தொட முடியாது. உலகின் உன்னதமான மொழி மவுனம் என ரஜினிகாந்த் பேசியது நடிகர் விஜய்யை தான் மறைமுகமாக தாக்கி பேசியதாக கூறப்படும் நிலையில், ஏற்க்கனவே ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையிலான மோதல் தற்பொழுது உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக ரஜினியை வெச்சு செஞ்சு வருகிறார் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் ரஜினி பேசிய கழுகு, காக்கா கதை குறித்து ப்ளூ சட்டை மாறன் தெரிவிக்கையில், கழுகு மக்களிடம் ஒன்றி வாழாது. உயரத்தில் தனியே திரியும். காகம் மனிதர்களுடன் வாழும். கழுகு சிறப்பு விருந்தை உண்ணும். காகம் எளியோர் படைக்கும் உணவை உண்ணும்.

சிறு உணவெனினும் அதை காகம் பகிர்ந்துண்டு உண்ணும். ஒரு காகம் இறந்தால் மற்றவை ஒன்று கூடும். பருந்து தனது வேட்டையை தனித்தே ருசிக்கும். பிற கழுகு சோகத்தில் காகத்திற்கு ஈடாக பங்கேற்காமல் சுயநலத்துடன் தனியே வானில் திரியும். உயரே பறப்பது மட்டுமே உயர்குணம் ஆகாது. கருமை நிறத்தில் இருப்பதால் கழுகை விட காகம் தாழ்ந்தும் போகாது. நீயும் கருப்புதான் என்பதை நினைவில் கொள் என ரஜினியின் நிறத்தை மறைமுகமாக சீண்டியுள்ள ப்ளூ சட்டை மாறன்.

மேலும், காமடி கழுகே.. இதை சொன்னாலும் கழுகு மண்டையில் ஏறாது. ஏறினாலும் ஏறாதது போல் நடிக்கும். யாரை காகமென்று கூறினார் என்று சமூக வலைத்தளம் எழுதுமாம். ப்ளூ சட்டை என தைரியமாக மேடையில் கூற கழுகுக்கு திராணி இல்லை. ஆகவே அல்லக்கைகளை உசுப்பி விடுகிறது. இதற்கெல்லாம் காகம் அசரவே அசராது. கழுகின் வண்டவாளங்கள் தொடர்ந்து தண்டவாளத்தில் ஏற்றப்படும். இப்படிக்கு, அண்டங்காக்கை என தெரிவித்துள்ள ப்ளூ சட்டை மாறன்.

மேலும் தொடர்ந்து ரஜினி ரசிகர்களை சீண்டும் விதத்தில் இன்றைய சினிமாவில் வியாபார ரீதியில், முதல் இடத்தில் ரஜினி, அடுத்து கமல்,அஜித், அதற்கு பிறகு நான்காவது இடத்தில் தான் ரஜினி உள்ளார் என்று தெரிவித்துள்ள ப்ளூ சட்டை மாறன், ஜெயிலர் பட ஆடியோ வெளியிட்டு விழாவில், கலாநிதி மாறனின் சன்ரைஸ் கிரிக்கெட் அணி பற்றி ரஜினி பேசிய போது,

சன்ரைஸ் அணியில் கலாநிதி மாறன் நல்ல வீரர்களை எடுக்க வேண்டும், சன்ரைஸ் அணி பின்னடைவை சந்திக்கும் போது கலாநிதி மாறன் மகள் காவ்யா சோகமாக இருப்பதை டிவியில் பார்க்க வருத்தமாக இருக்கிறது என ரஜினி பேசியுள்ளதற்கு பதிலடி கொடுத்துள்ள ப்ளூ சட்டை மாறன், மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து உச்சநீதிமன்றம், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி மற்றும் பலர் வருத்தம், கண்டனம் தெரிவிச்சிட்டாங்க. பட்.. முரட்டுக்காளை இதுவரை அதுபத்தி பேசல.

ஆனா.. எந்த விஷயத்துக்கு வருத்தப்பட்டு இருக்காரு பாருங்க. இதுதான் தவைரின் தனித்தன்மை. ஹாட்ஸ் ஆஃப் ஜி. இது மாதிரி பல அரிய கருத்துகளை சொல்லிட்டே இருங்க‌. மக்களுக்கு மிகுந்த பயனைத்தரும் என ரஜினிகாந்த்தை ப்ளூ சட்டை மாறன் வெச்சு செய்து ரஜினியின் ரசிகர்களை ஒரு பக்கம் கதற விட்டு கொண்டிருக்கையில், ப்ளூ சட்டை மாறனை மறுபக்கம் கொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.