என் மகளா இது.. ஐஸ்வர்யாவை பார்த்து ஆச்சரியத்தில் ரஜினி… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

ரஜினிகாந்த் இரண்டு மகள்களும் போட்டி போட்டு கொண்டு ரஜினிகாந்த் சம்பாரிக்கும் பணத்தை அழித்து கொண்டு வருகிறார்கள் என்றே சொல்லும் அளவுக்கு அவர்களின் நடவடிக்கைகள் இருந்து வந்துள்ளது. மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில், 3 படம் எடுத்து மிகப்பெரிய நஷ்டம், இதனை தொடர்ந்து மியூசிக் ஆல்பம் தயாரிக்கிறேன் என்கிற பெயரில் வெளிநாடுகளுக்கு சென்று வீண் செலவு செய்து ஐஸ்வர்யா ஒரு பக்கம் தந்தையின் பணத்தை ஐ காலி செய்து கொண்டிருக்கையில்,

மறுபக்கம் இரண்டாவது மகள் சௌந்தர்யா தனது தந்தையை வைத்து அனிமேசன் படம் எடுக்க விரும்பி பெரிய பட்ஜெட்டில் கோச்சடையான் படத்தை எடுத்து மிகப்பெரிய நஷ்டத்தை தந்தை ரஜினிகாந்துக்கு பரிசளித்தார் சௌந்தர்யா. இதன் பின்பு சௌந்தர்யா இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி 2 பெரும் நஷ்டம், இத்துடன் சினிமா பக்கமே வர கூடாது என தந்தை தெரிவிக்க, அடுத்ததாக பல கோடி முதலீட்டில் ஹூட் என்கிற செயலி ஒன்றை அறிமுகம் செய்தார்.

இது பேஸ்புக், டிவீட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு இணையாக வரவேற்பு பெற்று தானும் ஒரு தொழில் அதிபர் என பெயர் பெற்று விடலாம் என நினைத்த சௌதார்யாவுக்கு பெரும் நஷ்டம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. தன்னுடைய மகள்கள் சினிமா துறையில் ஈடுபடுவது ரஜினிக்கு விருப்பம் இல்லை, கோச்சடையான் படம் வெளியான நேரத்தில் முதலில் குடும்பம் , அதன் பின்பு தான் சினிமா இதெல்லாம் என ரஜினி தனது மக்களுக்கு அட்வைஸ் செய்து இருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேஸ்ட்ரோலாக நடித்து வருகிறார், நீண்ட இடைவேளைக்கு பின்பு ஐஸ்வர்யா இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளது ரஜினிகாந்துக்கு விருப்பமில்லை என்றாலும் கூட, மகளின் ஆசைக்காக அரை மனதோடு ஒப்புக்கொண்டார். மேலும் மகளின் விருப்பத்திற்கு ஏற்ப அந்த படத்தில் கெஸ்ட் ரோலாகவும் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் இதுவரை லால் சலாம் படம் எடுக்கப்பட்ட காட்சிகளை சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு அவருடைய மகள் ஐஸ்வர்யா போட்டு காண்பித்துள்ள. இதை பார்த்தவுடன் பிரமித்து போன நடிகர் ரஜினிகாந்த் என்னுடைய மகளாய் இது என்று பாராட்டியுள்ளார், அந்த அளவுக்கு லால் சலாம் படம் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக வந்து உள்ளதாக ரஜினிகாந்த் மிகப்பெரிய மகிழ்ச்சியில் உள்ளார் என கூறப்படுகிறது.