வாய்க்கு வந்ததை இனி அடிச்சு விட்டு போக முடியாது.. முன்னனி நடிகருக்கு விழுந்த ஆப்பு..

0
Follow on Google News

இந்திய மக்களிடம் பல புரட்சிகரமான சம்பவங்களை அரங்கேற்றியது சினிமா. குறிப்பாக தமிழகத்தில் சினிமா மோகத்தில் இன்றுவரை மக்கள் இருந்து வருவதை மறுக்க முடியாது. தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் காலத்தில் இருந்த சினிமா சிறுவர்கள், இளைஞர்களை நல்வழி படுத்தும் விதத்தில், மக்களுக்கு தேசப்பற்றை வளர்க்கும் விதத்தில் இருந்தது.

ஆனால் 20ம் நுற்றாண்டுகளுக்கு பின்பு மெல்ல மாற்றம் கண்ட இந்திய சினிமா குறிப்பாக தமிழக சினிமாக்களில் வியாபாரத்தை மட்டுமே மையமாக கொண்டு திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வெளியான பல படங்களில் தவறான செய்திகளை மக்கள் மத்தியில் விதைக்கும் வகையில் சில படங்கள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. இது போன்ற படங்கள் சென்சாரை கடந்து எப்படி திரைக்கு வந்தது என்ற கேள்விகளும் எழுந்தது.

மேலும் வியாபார நோக்கத்திற்காகவும், படத்திற்கு கிடைக்கும் எதிர்மறை விளம்பரத்துக்காகவும், சிலர் அரசுக்கு எதிராக ஆதாரமற்ற பொய் பிரச்சாரங்களை சினிமா வழியாக மக்கள் மத்தியில் விதைக்கு சம்பவம் அரங்கேறி வருவது குறிப்பிடதக்கது. தேசப்பற்று, சமூக அக்கறை கொண்ட படங்கள் வருவது தற்போது அறிதாக இருந்து வருகிறது. குறிப்பாக சிலர் மத நம்பிக்கைகளை கேலி செய்து படம் எடுப்பது, தேசத்திற்கு எதிரான விஷத்தை சினிமா வழியாக மக்கள் மத்தியில் விதைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவது போன்ற செயல்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது போன்ற செயல்களை கட்டுக்குள் கொண்டு வருபவதற்காக மத்திய அரசு ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு மசோதாவை அமல் படுத்த உள்ளது, கட்டுப்பாடுகள் இல்லாமல் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் உலா வரும் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தணிக்கைக்குழு ஒரு படம் தகுதியற்றது என்று கருதினால், அதற்கு சான்றுதர மறுக்கலாம்.

அந்தத் திரைப்படங்களை திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்துக்கு அனுப்பினால் அவர்கள் படத்தைப் பார்த்து சான்றிதழ் தருவார்கள். தணிக்கைக்குழுவின் முடிவு சரி என்று கருதினால் தீர்ப்பாயமும் சான்றிதழ் மறுக்கும். சம்பந்தப்பட்டவர்கள் பிறகு நீதிமன்றத்தைதான் நாட வேண்டும். இந்நிலையில் அந்த தீர்ப்பாயத்தை இப்போதைய அரசு கலைத்தது. இதனால், தணிக்கைகுழுவால் சான்றிதழ் மறுக்கப்பட்ட படங்கள் நீதிமன்றத்தை நாடுவது ஒன்றே வழியாக இருந்தது.

ஆனால் தற்போது அதற்கும் ஆப்பு வைப்பது போன்று அமைந்துவிட்டது புதிய ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, ஏற்கனவே இருக்கும் ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) திருத்தங்களை கொண்டு புதியதாக ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 மசோதாவை மத்திய அரசு அமல் படுத்த இருக்கிறது. அதன்படி ஒரு படம் தணிக்கைக்குழுவில் சான்றிதழ் பெற்றாலும், அரசால் அந்த சான்றிதழை மாற்றியமைக்க முடியும். அதாவது யு சான்றிதழ் பெற்ற படத்துக்கு ஏ சான்றிதழ் தர முடியும்.

தேவைப்பட்டால் அந்த சான்றிதழை ரத்து செய்யவும் முடியும். அதாவது சான்றிதழை ரத்து செய்து படம் வெளியாகாமல் முடக்க முடியும். இந்த சட்ட வரைவின் மூலம் தணிக்கைக்குழு, நீதிமன்றம் இரண்டையும் தாண்டிய அதிகாரத்தை மத்திய அரசு பெறுகிறது. இந்த மசோதா அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசால் தடை செய்யப்பட போகும் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களின் நிலை மிக பெரிய கேள்விக்குறியாகிவிடும்.

இந்நிலையில் சர்ச்சைகளில் சிக்கும் நடிகர்கள், 7% ஜிஎஸ்டி வசூலிக்கும் சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம். ஆனால் 28% ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் இந்தியாவில் மருத்துவம் இலவசமில்லை என்று தவறான செய்திகளை மக்கள் மத்தியில் சினிமா வழியாக விதைக்கும் நடிகர்கள், போகிற போக்கில் எதையும் வாய்க்கு வந்ததை அடித்துவிட்டு போக முடியாத சூழல் உருவாகியுள்ளது. அப்படி தொடர்ந்து அப்படி செயல்படும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களை தயாரிப்பதற்கு எந்த ஒரு தயாரிப்பாளர்களும் முன் வர மாட்டார்கள் என்கின்றனர் சமூக அக்கறை கொண்டவர்கள்.