ரஜினி மகள்னு பார்த்தா ஓவரா போகிற.. ஆணவத்தில் ஆட்டம் போட்டு அசிங்கப்பட்ட ஐஸ்வர்யா..

0
Follow on Google News

கணவர் தனுஷை விட்டு பிரிந்த பின்பு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா, ஏற்கனவே இயக்குனராக மொக்க படங்களை கொடுத்து, சில காலம் படம் இயக்குவதை கைவிட்டிருந்த நிலையில், தற்பொழுது மீண்டும் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார், எந்த ஒரு தகுதியும் இல்லாமல் அவருடைய அப்பா ரஜினிகாந்த் செல்வாக்கை பயன்படுத்தி பல தயாரிப்பு நிறுவனங்களை சந்தித்து கதை சொல்லி வந்த ஐஸ்வர்யா இயக்கும் படத்தை யாரும் இயக்க முன் வரவில்லை.

இந்நிலையில் லைக்கா தயாரிப்பில் ரஜினிகாந்த் புதியதாக இரண்டு படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் கமிட்டாவதற்கு பின்னணியில் மகள் ஐஸ்வர்யா இருந்துள்ளார். ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தை தயாரிப்பதற்கு எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் முன் வரவில்லை. இந்த நிலையில் ரஜினிகாந்த் தற்பொழுது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு ரஜினியிடம் கால் சீட் வாங்க தீவிரம் காட்டி வந்துள்ளது லைக்கா நிறுவனம். இதனை தொடர்ந்து லைக்கா நிறுவனத்திடம் ஐஸ்வர்யா ஒரு டீல் பேசியுள்ளார். அதில் என்னுடைய தந்தை படத்தை தயாரிக்க உங்களுக்கு கால்ஷீட் வாங்கித் தருகிறேன். ஆனால் அதற்காக தான் இயக்கும் படத்தையும் நீங்கள் தயாரிக்க வேண்டும். இந்த டீல் ஓகே என்றால் என்னுடைய தந்தையை உங்களுடைய தயாரிப்பில் நடிக்க வைப்பது என்னுடைய பொறுப்பு என்று ஐஸ்வர்யா டீல் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த டீலுக்கு லைக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு லைக்கா நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. அதே போன்று சொன்ன டீல் படி ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்க முன் வந்தது. லைக்கா தயாரிப்பில் ஐஸ்வர்யா இயக்க இருக்கும் படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்திற்க்கு லால் சலாம் என பெயரிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் இந்த படத்தில் நீண்ட தாடியுடன் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராக நடிக்க இருக்கிறார், இந்த படத்தில் நடிகர் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பிப்ரவரி மாதம் தள்ளி வைக்கப்பட்டது,

ஆனால் தற்பொழுது பிப்ரவரி மாதமும் படப்பிடிப்பு தொடங்காமல் காலதாமதமாகி வருகிறது, இதற்கு ஐஸ்வர்யாவின் ஆணவம் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது, படம் தொடங்குவதர்க்கு முன்பே அந்த படத்தில் இருந்து காஸ்ட்யூம் டிசைனர் வெளியேறியுள்ளார். மேலும் விரைவில் இந்த படத்தில் நடிக்க இருக்கும் விஷ்ணு விஷால் வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது,

படம் குறித்த டிஸ்கேஷன் நடக்கும் பொழுது, ஐஸ்வர்யா ஏற்கனவே 10 வெற்றி படம் கொடுத்து பல விருதுகளை அள்ளி குவித்துள்ளது போன்று, பல முன்னனி நடிகர்கள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு காத்திருப்பது போன்று ஆணவத்தில் நடந்து கொள்வதால், ரஜினிகாந்த் மகள் என்கிற மரியாதைக்கு தான் இந்த படத்தில் காமிட்டானோம்,என்று ஒவ்வொருவராக லால் சலாம் படத்தில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள்.

அந்த வகையில், இந்த படத்தில் நடிக்கும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரிடம் மரியாதை இல்லாமல் ஐஸ்வர்யா நடந்து கொள்வது, இந்த படத்தில் நடிக்க உள்ள விஷ்ணு விஷாலும் லால் சலாம் படத்தில் இருந்து வெளியேறும் முடிவில் இருந்து வருவதாக வெளியாகியுள்ளது.