மதுபோதையில் அட்டூழியம்… திருப்பதியில் பத்திரிகையாளரை ஓட ஓட விரட்டிய ரஜினி… எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக முதல் இடத்தை தக்க வைத்து கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகின்றவர் நடிகர் ரஜினிகாந்த். ஆன்மீகவாதியான ரஜினிகாந்த் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய முக்கிய பிரபலங்களில் ஒருவர். ஆனால் ரஜினிகாந்த் பற்றிய யாரும் அறிந்திராத பல சம்பவங்கள் அவர் அரங்கேறியது உண்டு.

அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் 1980ம் ஆண்டு வெளியான பில்லா படத்தில் இடம் பெற்ற “வெத்தலைய போட்டேன்டி” பாடலில் ரஜினிகாந்த் மது போதையில் ஆடுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக அந்த காலகட்டத்தில் ரஜினிகாந்த் மதுவுக்கு அடிமையாகி இருந்தார், பல தடவை படப்பிடிப்புக்கு கூட போதையில் ரஜினிகாந்த் வருவார் என கூறப்படுகிறது.

அந்த வகையில், வெத்தலைய போட்டேன்டி பாடலுக்கு ரஜினி மது போதையில் தத்ரூபமாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக, இயக்குனர் மது அருந்தி ரஜினிகாந்த் இந்த பாடலில் நடித்தாலும் பரவாயில்லை என தெரிவிக்க, உடனே ரஜினிகாந்தும் மது அருந்திவிட்டு போதையில் அந்த பாடலில் நடித்துள்ளார், தொடர்ந்து ஐந்து நாட்கள் நடந்த இந்த பாடல் கட்சியின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் படப்பிடிப்பு இடைவேளையில் படப்பிடிப்பு தளத்தில் மதுபோதையில் பல அட்டூழியங்கள் செய்துள்ளார்.

இந்நிலையில் அந்தப் பாடல் காட்சிகள் படப்பிடிப்பு முடிந்த பின்பு, ரஜினிகாந்த் நம்ம ரொம்ப ஓவரா தான் போதையில் நடந்து கொண்டோம் என உணர்ந்து, ரஜினியுடன் அந்த பாடலில் உடன் நடித்த நடிகை ஸ்ரீபிரியாவிடம் ஏதாவது தவறு நடந்திருந்தால் தப்பா எடுத்துக்காதீங்க என்று ஒரு கிப்ட் கொடுத்துள்ளார். அதற்கு ஸ்ரீபிரியா, அந்த கிப்ட் மனோரமாவிடம் கொடுங்கள், நீங்க வரை தான் ரொம்ப தொந்தரவு செய்து விட்டீர்கள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அதே காலகட்டங்களில் ரஜினி மது போதையில் செய்யும் தகராறு குறித்து தொடர்ந்து பத்திரிகை செய்திகள் வந்து கொண்டிருந்தது. இதனால் பொதுவாகவே செய்தியாளர்கள் மீது கடும் கோபம் ரஜினிகாந்துக்கு இருந்துள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டி ஒன்று கொடுத்தார் ரஜினிகாந்த். அப்போது திருப்பதியில் எனது திருமணம் நடைபெற இருக்கிறது அதற்கு நீங்கள் யாரும் வரக்கூடாது.

இதை தெரிவிப்பதற்காக உங்களை நான் அழைத்து இந்த பேட்டியை கொடுக்கிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து திருப்பதியில் நடைபெற்ற ரஜினிகாந்த் திருமணத்தில் இரண்டு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து கொண்டுள்ளார்கள். அதை மணமகன் ரஜினிகாந்த் பார்த்து டென்ஷனாகி, அந்த இரண்டு பத்திரிகையாளர்களை ஓட ஓட விரட்ட, அவர்களும் அங்கிருந்து தெறித்து ஓடியதாக கூறப்படுகிறது.

200 கோடி முதலீடு மாதம் 20 கோடி சம்பாரிக்கு சூர்யா.. என்ன தொழில் தெரியுமா.?