தலைக்கனம் பிடித்த வடிவேலு வேண்டவே வேண்டாம்… ரஜினி பேச்சுக்கு மரியாதை இல்லை.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை காமெடி நடிகர்களில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் வடிவேலு, முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் வடிவேல். சினிமாவில் எந்த அளவுக்கு பிசியாக வடிவேலு இருந்தாரோ, அதே அளவு அவருக்கு தலக்கணமும் இருந்தது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் காமெடியனாக வடிவேலு நடித்திருப்பார். இதில் சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் கடந்த பத்து வருடங்களாக சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போன வடிவேலு தற்பொழுது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அடுத்தடுத்த புதிய படங்களில் நடித்து வரும் வடிவேலுக்கு மக்கள் மத்தியில்வரவேற்பு இல்லை. மேலும் பெரிதாக பேசும் அளவுக்கு முக்கியமான படங்கள் எதுவும் வடிவேலு கைவசம் இல்லை. இந்த நிலையில் முன்னணி நடிகர் படங்களில் வாய்ப்பை பெற்று, மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்கிற திட்டமிடலுடன் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறார் வடிவேலு.

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வடிவேலு அடுத்த புதிய படத்தின் தனக்கு வாய்ப்பு தருமாறும் கேட்டுள்ளார். இந்நிலையில் ஜெயிலர் படத்தில் வடிவேலு நடிக்க இயக்குனரிடம் ரஜினிகாந்த சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்திற்கு வடிவேலு செட் ஆக மாட்டார் என இயக்குனர் நெல்சன் வடிவேலுவை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

மேலும் தயாரிப்பாளர் தரப்பில் திட்டவட்டமாக ரஜினிகாந்தின் கோரிக்கையை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் ஜெயிலர் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள யோகி பாபு நடிக்க இருக்கிறார்.இருந்தும் ரஜினிகாந்த் சிபாரிசு செய்தும் வடிவேலுவுக்கு வாய்ப்பு கிடைக்காதது, ரஜினிகாந்த் பேச்சுக்கு சினிமாவில் மரியாதை இல்லை என்கிற பேச்சும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

சிம்பு – அதிதி சங்கர் விவகாரம் முடிவுக்கு வந்தது… செம்ம மகிழ்ச்சியில் இயக்குனர் சங்கர்… என்ன நடந்தது தெரியுமா.? https://youtu.be/qLb3kX6_j6E