லிங்குசாமிக்கு உதவிய ராகவா லாரன்ஸ்… அந்த மனசு தான் சார் கடவுள்.. என்ன செய்தார் லாரன்ஸ் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் லிங்குசாமி தமிழ் பல கமர்சியல் ஹிட் கொடுத்த வெற்றி இயக்குனராக வலம் வந்தவர். இயக்குனராக இருந்த லிங்குசாமி ஒரு கட்டத்தில் அவருடைய சகோதரர் உடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்கின்ற தயாரிப்பா நிறுவனத்தை தொடங்கி சொந்தமாக படம் தயாரிக்க தயாரித்து வந்தார். ஆரம்பத்தில் அவருடைய தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல வெற்றியை கொடுத்து வசூல் ரீதியாக லாபத்தையும் பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து லிங்குசாமி தயாரிப்பில் வெளியான அஞ்சான், உத்தம வில்லன் போன்ற படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது.இதனால் கடன் வாங்கி படம் தயாரிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட லிங்குசாமி. சில நிறுவனங்களிடம் கடன் வாங்கி படம் தயாரிக்க தொடங்கினார். அதில் பிரபல நிறுவனத்திடம் 1.30 கோடி ரூபாய் கடன் பெற்ற லிங்குசாமி.

லிங்குசாமி எந்த படத்திற்கு கடனாக வாங்கினாரோ, அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை, வாங்கிய கடனையும் திருப்பி அவரால் செலுத்த முடியவில்லை. கடனை திருப்பித் தராமல் லிங்குசாமி காலதாமதம் செய்தார். இதனை தொடர்ந்து கடன் கொடுத்த நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான காசோலையை லிங்குசாமி கொடுத்தார்.

ஆனால் அந்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததை தொடர்ந்து லிங்குசாமி மீது மோசடி வழக்கு பதியப்பட்டு,தற்பொழுது நீதிமன்றம் சிறை தண்டனையும் விதித்துள்ளது. இந்த நிலையில் சினிமா துறையைச் சேர்ந்த லிங்குசாமிக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளதற்கு, சினிமா துறையை சேர்ந்த பல நடிகர்கள் அவருக்கு உதவும் முன் வந்துள்ளனர்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் லிங்குசாமி தயாரிப்பில் ஒரு படத்திற்கான கால் சீட் தருவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆடை மற்றும் குளு குளு படத்தின் இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் நடிக்கும் லாரன்ஸ் இந்த படத்தை லிங்குசாமி தயாரிப்பதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளார். அவராக முன்வந்து லிங்குசாமி அழைத்து இந்த படத்தை நீங்கள் தயாரிங்கள் என்ற வாய்ப்பை லாரன்ஸ் கொடுத்துள்ளார்.

இந்த படத்தின் இயக்குனர் ரத்தினகுமார் இயக்குனர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய நிலையில் தற்போது லிங்குசாமி தயாரிக்கும் ராகவா லாரன்ஸ் புதிய படத்திற்கு கதை திரைக்கதை லோகேஷ் கனகராஜ் எழுதுகிறார், ரத்தினகுமார் இந்த படத்தை இயக்குகிறார். இந்த நிலையில் இக்கட்டான பொருளாதார சிக்கலில் சிக்கி சிதைந்து தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் லிங்குசாமிக்கு தாமாக முன்வந்து லாரன்ஸ் உதவி செய்துள்ளது சினிமா துறையினர் மத்தியில் பாராட்டையும் பெற்றுள்ளது.