ரஜினியை நம்பினால் நடு தெருவில் தான் நிற்க வேண்டும்… இளம் இயக்குனருக்கு வந்த எச்சரிக்கை..!

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்தே, இந்த படம் கொரோனா தொற்றின் காரணமாக மிகப்பெரிய தாமதத்திற்கு பின்பு வெளியானது. குடும்பங்கள் கொண்டாடும் விதத்தில் கமர்சியல் படமாக அண்ணாத்தே இருந்திருந்தாலும், வியாபார ரீதியில் தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்த லாபத்தை பெற்று தரவில்லை.

இதனால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ரஜினிகாந்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, மேலும் அதே தயாரிப்பாளருக்கு ஒரு படம் நடித்து தர கால் சீட் தருவதாக ஒப்புக்கொண்டார் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து கொண்டு வருகிறது.

இருந்தும் ரஜினிகாந்த் புதிய படத்தை இயக்குவதற்கு ரஜினியிடம் கதை சொல்லி காத்திருந்து ஏமாந்த இயக்குனர்கள் ஏராளம். அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்த ரஜினிகாந்த், மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து படம் நடிக்க அவரிடம் கதை கேட்டு ஓகே செய்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் அந்தப் படத்திற்கான திரைக்கதை மற்றும் ஸ்கிரிப்ட் என அனைத்தும் ஏற்பாடு செய்து அண்ணாத்தே படம் முடிந்தவுடன் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கலாம் என்கின்ற ஒரு எதிர்பார்ப்பில் இருந்துள்ளார்.

ஆனால் ரஜினிகாந்த், இயக்குனர்கள் கே எஸ் ரவிக்குமார், பி வாசு கார்த்திக் சுப்புராஜ், சிபி சக்கரவர்த்தி, நெல்சன் திலீப்குமார் என இதுபோன்ற இயக்குனர்களிடம் கதை கேட்ட ரஜினிகாந்த் எப்போதுமே ஓடுகின்ற குதிரையில் சவாரி செய்கின்றவர். அந்த வகையில் அப்போது நெல்சன் இயக்கிய டாக்டர் படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததால் ஓடுகின்ற நெல்சன் என்கிற குதிரையின் மீது ஏறி சவாரி செய்ய முடிவு செய்து நெல்சனை தேர்வு செய்தார்.

ஆனால் எதிர்பாராத விதத்தில் நெல்சன் இயக்கத்தில் அடுத்து வெளியான பீஸ்ட் படுதோல்வி அடைய இயக்குனரை மாற்றி விடலாமா என்கின்ற திட்டத்திலும் ரஜினிகாந்த் தள்ளப்பட்டார். ஆனால் நெல்சன் மீது உள்ள நம்பிக்கையில் தொடர்ந்து புதிய படத்தின் இயக்குனரில் எந்த மாற்றமும் இல்லாமல் ஜெயிலர் படத்தின் வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் ரஜினியை நம்பி நீண்ட வருடமாக கதையை தயார் செய்து ரஜினியின் வாய்ப்புக்காக காத்திருந்து ஏமாற்றம் அடைந்த இயக்குனர்களில் கே எஸ் ரவிக்குமார் முதண்மையனவர், அதே போன்று சந்திரமுகி பார்ட் 2 படம் எடுக்க நடிகர் ரஜினிகாந்திடம் கதையை தெரிவித்து காத்திருந்து காத்திருந்து ஏமாற்றமடைந்த இயக்குனர் பி. வாசு தற்போது ராகவ லாரன்ஸ் வைத்து சந்திரமுகி 2 படத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியிடம் சமீபத்தில் கதை கேட்ட ரஜினிகாந்த், தற்போது நடிக்கும் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு அடுத்த புதிய படத்தில் சிபி சக்கரவர்த்தி உடன் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் உறுதி செய்ததை தொடர்ந்து இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி புதிய படத்திற்கான திரைக்கதை அமைப்பது மற்றும் ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகளை தீவிரமாக தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் சிபி சக்கரவர்த்திக்கு நெருக்கமான சினிமா துறையைச் சேர்ந்தவர்கள், அவரிடம் ரஜினிகாந்திடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர், இதுபோன்றுதான் கார்த்திக் சுப்புராஜ்யிடம் கதை கேட்டு திரைக்கதை மற்றும் ஸ்கிரிப்ட் வேலையை தொடங்குகள் என தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்,

ரஜினிகாந்தின் பேச்சைக் நம்பி அதற்கான அனைத்து வேலைகளையும் செய்து முடித்து ரஜினிகாந்தின் கால் சீட்டுக்காக காத்திருந்து கடைசியில் கார்த்திக் சுப்புராஜ் ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம், மேலும் ரஜினிகாந்தை நம்பி மற்ற நடிகர்களை வைத்து இயக்கம் வாய்ப்பு வந்தும், அந்த படத்தை தவிர்த்து வந்தார் கார்த்திக் சுப்புராஜ். அது போன்று நீங்கள் ரஜினிகாந்தை முழுவதுமாக நம்பி மற்ற பட வாய்ப்புகளை தவிர்த்து வந்தால் இறுதியில் நீங்கள் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என சிபி சக்கரவர்த்தியை சினிமா துறையினர் எச்சரித்து வருவதாக கூறப்படுகிறது.