என் மகளை காப்பாற்றுங்க… கண்கலங்கிய தாய்க்கு கடவுள் உதவி செய்த பாலா…

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவரை அனைவரும் வெட்டுக்கிளி என்று தான் அழைப்பார்கள். ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி செய்து வந்த இவர் மற்றவர்கள் கொடுக்கும் கவுண்ட்டருக்கு உடனடியாக பதில் கவுண்ட்டர் கொடுத்து விடுவார்.

அதற்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் படுத்திக் கொண்டு இருந்தார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அதிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட KPY பாலா செய்யும் காமெடிக்கு அளவே கிடையாது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார்.

இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தும் வருகிறார். சமீபத்தில் கூட இவர் தன்னுடைய பிறந்த நாளை ஒட்டி முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். இது குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். பாலாவின் இந்த நல்ல மனசுக்கு தற்போது சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பாலா, மருத்துவமனையில் சிகிச்சை வந்த பாவா லட்சமணனை நேரில் சந்தித்து ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்து உதவினார்.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பாவா லட்சுமணனிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேசி, என்னால் முடிந்த உதவியை செய்தேன் என்றார். இதையடுத்து,தன்னுடைய சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்து உதவினார்.

முதலில் அறந்தாங்கி அருகே முதியோர் இல்லம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்த பாலா, அதையடுத்து மலை கிராமம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். இந்த நிலையில் பாலாவிற்கு ஒரு தாய் தனது மகள் சிகிச்சைக்காக பணம் தேவைப்படுகிறது அவள் குறித்த வீடியோவை உங்களது பக்கத்தில் போட முடியுமா அதனால் தனது மகளுக்கு உதவுகள் வரும் என கேட்டுள்ளார்.

ஆனால் பாலாவோ, அந்த தாயிடம் நேரில் சந்திக்கலாமா என்று கேட்டுவிட்டு அவருடைய வீட்டிற்கே சென்று இருக்கிறார். மேலும், ஒரு லட்சம் தொகையை அவர்களிடம் கொடுத்து இருக்கிறார். அதோடு அந்த பெண்ணின் பிஸியோ தெரபி சிகிச்சைக்கு ஆகும் செலவையும் பாலாவே ஏற்று கொள்வதாக கூறி இருக்கிறார். மேலும், இந்த வீடியோவை பாலா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த பலர், என்ன மனுஷன் சார் நீங்க! என்று பாலாவை பாராட்டி வருகிறார்கள்.

படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தனியார் ஷோக்கள் என நிறைய கலந்துகொண்டு சம்பாதிக்கும் பாலா அதை வைத்து ஆடம்பரமாக வாழ நினைக்காமல் மற்றவர்களுக்கு உதவி வருகிறார். பெரிய பணக்காரர்கள் மட்டுமே மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதை தாண்டி மனம் இருந்தால் எந்த வகையில் சாதாரண மனிதன் கூட உதவி முடிவும் என்பதை காட்டி வருகிறார் பாலா, இவரின் நல்ல மனதிற்கு எக்கச்சக்கமான பாராட்டுகள் வந்துள்ளது.