முத்தையாவுக்கு எதிராக பா.ரஞ்சித் உடன் கை கோர்த்த கமல்… என்ன பிரச்சனை தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் கமலஹாசன் சொந்த தயாரிப்பில் அவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் கொடுத்து. பெரும் கடனில் தத்தளித்து கொண்டிருந்த கமலஹாசனை மீட்டெடுத்த படம் விக்ரம். இந்த படத்திற்கு பின்பு கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் பல படங்களை தயாரிக்க முடிவு செய்து முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

அந்த வகையில் இயக்குனர் முத்தையாவை நேரில் கிராமத்து கதைகளில் நடிக்க வேண்டும் என என்கின்ற தனது ஆசையை வெளிப்படுத்திய கமல்ஹாசன், அதற்கு முன்பு தன்னுடைய தயாரிப்பில் வேறு ஒரு நடிகரை வைத்து ஒரு படம் பண்ணனும் என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன், அதற்கான கதையையும் தயார் செய்துள்ளார் முத்தையா. கதையை கேட்ட கமல்ஹாசன் இதற்கு பொருத்தமாக நடிகர் ஆர்யா இருப்பார், நீங்கள் அவரை சந்தித்து கதை சொல்லுங்க என முத்தையாவை அனுப்பி வைத்துள்ளார் கமல்ஹாசன்.

கதையை கேட்ட ஆர்யா ஓகே செய்துள்ளார், முத்தையாவிடம் இந்த கதை நன்றாக இருக்கிறது, ஆனால் கமல்ஹாசன் தயாரிப்பில் நாம் இந்த ப்ராஜெக்ட் செய்ய வேண்டாம், வேறு ஒரு தயாரிப்பாளரை நான் தயார் செய்து தருகிறேன் என்று ஆர்யா தெரிவிக்க, அதற்கு முத்தையாவும் ஓகே செய்துள்ளார். இந்த விஷயம் கமல்ஹாசன் கவனத்திற்கு வந்ததும் அந்த ப்ராஜெக்ட்டை கேன்சல் செய்து விட்டார் கமல்ஹாசன்.

மேலும் முத்தையா இயக்கத்தில் அடுத்த தான் நடிப்பதாக இருந்த படத்தையும் கைவிட்டு விட்டார் கமல்ஹாசன். இதனால் கமல்ஹாசனை வைத்து தேவர் மகன், விருமாண்டி போன்ற கிராமத்து சாயலில் மிகப்பெரிய ஒரு படம் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டார் முத்தையா.பொதுவாக முத்தையா அவர் சார்ந்த சமூகம் பற்றி படம் எடுக்கக் கூடியவர் என்கின்ற விமர்சனம் இருந்து வருகிறது.

அதன் அடிப்படையில் தான், தேவர் மகன், விருமாண்டி போன்று ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்து மீண்டும் கிராமத்து கதையில் நடிக்க ஆசைப்பட்ட கமல்ஹாசன் முத்தையாவை அழைத்து தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார், ஆனால் அது ஆர்யாவின் நடவடிக்கையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் முத்தையா போன்று இயக்குனர் பா. ரஞ்சித் அவருடைய சமூகம் சார்ந்து படம் எடுத்து வர கூடியவர் என்கிற விமர்சனம் உண்டு.

மேலும் முத்தையா மற்றும் பா ரஞ்சித் இருவருக்கும் இடையில் சினிமாவில் ஒருவித போட்டி இருந்து வரும் நிலையில், முத்தையாவுக்கு எதிராக பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு கிராமத்து கதையில் கமல்ஹாசன் கமிட் ஆகியுள்ளார். அதே போன்று ராஜ் கமல் பிலிம்ஸ் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் எடுக்கப்பட இருந்த படம் காதர் பாட்ஷா என்கின்ற முத்துராமலிங்கம் தற்பொழுது கோவில்பட்டி மற்றும் பிற பகுதிகளில் படபிடிப்பு நடந்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் மூலம் தூது விட்ட விஜய்… தூக்கி எறிந்து கெத்து காட்டிய விஷால்..