உயிருக்கு உயிராய் காதலித்த கமல் – ஸ்ரீவித்யா ஜோடி… மூன்று முறை கருக்கலைப்பு செய்த ஸ்ரீவித்யா..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் பல புதுமையான டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், அதன்பிறகு பல தடைகளை கடந்து சினிமாவில் நாயனாக அறிமுகமாக இவருக்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர். தொடர்ந்து அவரது இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

சினிமாவில் காதலர்களாக நடிக்கும் பலரும் நிஜ வாழ்க்கையிலும் காதலர்களாக இருப்பார்கள் என்று பலரும் நினைப்பது உண்டு. அந்த வகையில், தன்னுடன் இணைந்து பல படங்களில் நடித்த நடிகர் கமல்ஹாசனை ஸ்ரீவித்யா காதலித்தார் என்ற தகவல் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலம். இப்படி ஒரு நிலையில் ஸ்ரீவித்யா, கமல் குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. அதில் பேசிய அவர் ‘ நானும் அவரும் காதலிச்சது ஒட்டுமொத்த ‘ துறைக்கும் எங்கள் இரண்டு குடும்பத்திற்கும் தெரியும். ஒரு நாள் என் அம்மா எங்கள் இருவரையும் அழைத்து. உங்கள் இருவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

இதெல்லாம் வேண்டாம் என்று சொன்னார். இதனால் அவருக்கு மிகுந்த கோபம் வந்துடிச்சி. அதன் பின்னர் அவர் என்னிடம் பேசவே இல்லை. திடீர்ன்னு ஒரு நாள் அவருக்கு இல்லை. ஆகிவிட்டதாக நான் கேள்விப்பட்டவுடன் நான் அவரை இழந்துவிட்டேன் என்று அப்படியே உறைந்து போனேன்’ என்றும் பேசி இருக்கிறார். 1973-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற படத்தில் முதன் முதலாக இணைந்து நடித்த கமல்ஹாசன் – ஸ்ரீவித்யா ஜோடி, அடுத்து அபூர்வ ராகங்கள், அண்ணை வேளாங்கண்ணி என சில படங்களில் நடித்திருந்தனர்.

1978-ல் கமல்ஹாசன் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்ட நிலையில், அதே ஆண்டு ஜார்ஜ் தாமஸ் என்பரை ஸ்ரீவித்யா திருணம் செய்துகொண்டார். ஆனால், எத்தனையோ திரைப்படங்களில் பலருடைய மனதை கவர்ந்த ஸ்ரீவித்யா அவருடைய நிஜ வாழ்க்கையில் பட்ட வேதனை யாரும் பட்டு இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும் அவ்வளவு வேதனைகளையும் ஸ்ரீவித்யா அனுபவித்திருக்கிறார். 1980-ம் ஆண்டு கணவரை விவகாரத்து செய்த அவர் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில், 1987-ம் ஆண்டு கமல்ஹாசனுடன் புன்னகை மன்னன், நம்மவர், காதலா காதலா, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா தனது கடைசி நாளில் கமல்ஹாசனை பார்க்க விரும்பிய நிலையில், அவரும் சென்று பார்த்து வந்துள்ளார். 2006-ம் ஆண்டு ஸ்ரீவித்யா மரணமடைந்தார்.

இது குறித்து அவருடைய அண்ணி பல தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியதாவது, “தமிழில் மட்டுமல்லாமல் ஸ்ரீவித்யா கேரளாவில் ஒரு வருடத்திற்கு 14 படங்கள் வீதம் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்திருக்கிறார். ஸ்ரீவித்யாவிற்கு ஒரே ஒரு அண்ணன் மட்டும் தானாம். அவருடைய அம்மா ஒரு பாடகி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதுபோல ஸ்ரீ வித்யா அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது கமலுடன் ஏற்பட்ட நட்பு பிறகு காதலாக மாறி சினிமா துறையில் பலருக்கும் தெரிந்திருந்ததாம்.

அந்த நிலையில் இரு வீட்டருக்கும் தெரிந்த போது ஸ்ரீவித்யாவின் அம்மாவிடம் கமல்ஹாசன் நேரடியாக பேசும் போது அதற்கு ஸ்ரீவித்யாவின் அம்மா சம்மதிக்காமல் திருமணத்திற்கு மறுத்து விட்டாராம். அதனால் ஸ்ரீவித்யாவை விட்டுவிட்டு கமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். கமலுடைய திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் தனிமையில் இருந்த நிலையில் மலையாள புரொடியூசரான சார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தாராம். திருமண வாழ்க்கையில் ஸ்ரீவித்யா கர்ப்பம் ஆனார். ஆனால் குழந்தை பெற்றால் நடிக்க முடியாது என்பதால் அவரது கணவர் ஜார்ஜின் தூண்டுதல்பேரில் கருவை கலைத்துவிட்டார்.

ஸ்ரீவித்யாவை ஜார்ஜ் ஒரு பணம் தரும் மெஷினாகவே பார்த்தார். ஒரு சமயம் ஸ்ரீவித்யாவின் ஹேர் டிசைனர் வந்து ஸ்ரீவித்யாவின் அண்ணனிடம், என்ன அந்தப் பொண்ணை அப்படி விட்டுட்டீங்க. கை நிறைய தூக்க மாத்திரைகளை வைத்துக்கொண்டு சாகப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பதாக சொன்னார். உடனே வேக வேகமாக ஸ்ரீவித்யாவின் வீட்டுக்கு அவரது தாய் சென்றிருக்கிறார்.

ஆனால் தாயையும், மகளையும் உள்ளே வைத்து பூட்டிவிட்டு ஜார்ஜ் சென்றுவிட்டார். அருகில் இருந்தவர்களின் உதவியால் இரண்டு பேரும் வெளியேறினார்கள். ஸ்ரீவித்யா கிறிஸ்டியனாக மாறியதால் விவாகரத்தும் பெற முடியாமல், வேறு ஒரு திருமணமும் செய்யாமல் 10 வருடங்கள் போராடினார். ஒருவழியாக விவாகரத்து பெற்று தனிமையிலேயே இருந்து தனது உயிரை விட்டார்” என்றார்.