என்னை கமல்ஹாசன் கட்டி பிடித்து… கமல்ஹாசனிடம் தனக்கு நடந்ததை போட்டுடைத்த வனிதா விஜயகுமார்…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்தது சரி என தொடர்ந்து வனிதா பேசி வந்தார். இந்த நிலையில், தன் மீது பிரதீப் ஆதரவாளர் தாக்குதல் நடத்தியதாக சமீபத்தில் வனிதா பரபரப்பை ஏற்ப்படுத்தி இருந்தார்.

நடிகை வனிதா நள்ளிரவில் தனது காரில் வீட்டிற்கு வந்தபோது திடீரென தன் முன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தோன்றி பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுக்கறீங்களா? அதுக்கு நீ என்ன சப்போர்ட் வேறயா? என்று கூறி முகத்தில் பலமாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார். முகம் பஞ்சரானாலும் தொடர்ந்து பிக் பாஸ் குறித்து விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார் வனிதா.

சமீபத்தில் அர்ச்சனாவை மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் வனிதா விஜயகுமார், அதாவது அதேபோல அர்ச்சனாவே கேம் சேஞ்சர் என்று சொல்கிறார்கள். பொதுவாக கேம் சேஞ்சர் என்றால், ஒரு நிகழ்ச்சி சுமாராக சென்று கொண்டிருக்கும் சமயத்தில் ஒருவர் அந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக மாற்றுவார்.

அவரைத்தான் நாம் கேம் என்று சொல்வோம். ஆனால் அர்ச்சனா, இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நாசம் செய்திருக்கிறார் என்று சொல்லலாம். அர்ச்சனா எந்த அளவிற்கு சுயநலவாதி டிராமா காரி சூழ்ச்சி செய்யக்கூடியவர் என்பது அந்த படத்தில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு விட்டது. அர்ச்சனா இந்த கேமை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமா அந்த அளவுக்கு பயன்படுத்தி, தான் தனியாக தெரிய வேண்டும் என்று மற்ற போட்டியாளர்களை காலி செய்து இருக்கிறார்.

நான் இதனை எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்வேன். அர்ச்சனா வெளியே வந்தாலும் அதை அவள் மூஞ்சி மேலே சொல்வேன். அவள் ஆடியது போல் ஏமாற்றுத்தனமான கேமை இதுவரை நான் எந்த சீசனிலும் பார்த்ததில்லை.எனக்கு இது பயங்கரமான கோபத்தை உண்டாக்கி இருக்கிறது.காரணம் என்னவென்றால் இது மிக மிக தவறான விஷயம்.” என இதற்கு முன்பு பேசியிருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது கமல்ஹாசனையும் வெளுத்து வாங்கியுள்ளார் வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பிக் பாஸ் பிரபலங்கள் என்றே அறியப்படுவீர்கள் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என கமல்ஹாசன் ஒவ்வொரு சீசனிலும் சொல்லி வருகிறார். ஆனால், கமல்ஹாசன் யாருக்குமே வாய்ப்புக் கொடுக்க மாட்டார் என வனிதா விஜயகுமார் பேசியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமல் சார் படத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்டேன் என்றும் அதற்கு அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். ஆனால், எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு தரவில்லை எனக்கூறியுள்ளார். மேலும், பிக் பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்ட போது கூட கமல் சார் வாய்ப்புத் தரவில்லை என்றார். பிக் பாஸ் சீசன் 3ல் தர்ஷனுக்கு டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் தன்னுடைய தயாரிப்பில் ஒரு படத்தில் அவரை ஹீரோ ஆக்குகிறேன் என கமல் வாக்கு கொடுத்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பே தரவில்லை என வனிதா பேசியுள்ளார்.