இந்த முறை தப்பவே முடியாது.. உண்மையான தந்தை யார்.? சிக்கும் வலுவான ஆதாரம்.. கடும் பீதியில் யார் தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுரை மேலூர் அருகே மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் – மீனாக்ஷி தம்பதியினர் மதுரை உயர்நிதி மன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். அந்த வழக்கில், சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் அவர் சென்றுவிட்டார், ஆகையால் மகன் தனுஷிடம் இருந்து மாதம் எங்களுக்கு உதவி தொகை பெற்று தரவேண்டும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து. இந்த வழக்கு தொடர்புடைய நடிகர் தனுஷை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், தனுஷ் சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் LKG முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்ததாக, அதற்கான சான்றிதழ்களையும் சமர்பித்தனர்.

இதன் பின்பு தனுஷ் பெற்றோர் கஸ்தூரிராஜா – விஜயலக்ஷ்மி தம்பதியினர் தான் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்து. கதிரேசன் – மீனாட்ஷி தம்பதியினர் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இந்நிலையில் தற்பொழுது மீண்டும் கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர், அதில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யபட்ட பிறப்பு சான்றிதழில் தேதி குறிப்படவில்லை என்றும்.

ஆகையால் அந்த பிறப்பு சான்றிதழ் போலியானவை என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இது தொடர்பாக நடிகர் தனுஷ்க்கு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் பெற்றோர் யார் என்கிற விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மீண்டும் கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் தாக்கல் செய்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்நிலையில் இம்முறை விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் எனவும், மேலும் யார் பக்கம் உண்மை இருக்கிறதோ, அந்த தரப்பினர் இம்முறை DNA பரிசோதனை செய்ய நீதிமன்றத்தை வலியுறுத்தவர்கள் என்றும், அதை ஏற்று கொண்டு நீதிமன்றம் தனுஷ் , கஸ்தூரி ராஜா மற்றும் கதிரேசன் ஆகியோருக்கு DNA பரிசோதனை செய்து சமர்ப்பிக்க உத்தரவிடலாம் என கூறப்படுகிறது. அப்படி DNA பரிசோதனை முடிவில் தனுஷ் உண்மையான பெற்றோர் யார் என்பது வெளிச்சத்துக்கு வந்து விடும்.

அப்போது, யார் பக்கம் உண்மை இருக்கு என்பது உலகத்திற்கு தெரியவரும், இதனால் யார் பக்கம் உண்மை இல்லையோ, அந்த தரப்பினர் நிச்சயம் தற்போது பீதியில் இருப்பார்கள் என்றும். மேலும் இந்த முறை யார் பக்கம் உண்மை என்பது நிரூபணமாகி, பொய் பேசியவர்கள் சிக்குவது உறுதி என கூறப்படுவது குறிப்பிடதக்கது.

விபூதி, குங்குமம் வைக்க கூடாதா.? ஏ ஆர் ரகுமானுக்கு முக்கிய சினிமா பிரபலம் கண்டனம்.. என்ன நடந்தது தெரியுமா.?