என்ன சொன்னாலும் கேட்கிறேன்… ஐஸ்வர்யாவிடம் சரண்டரான தனுஷ்… இருவருக்கும் இடையில் நடந்த பரபரப்பு…

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் திடிரென பிரிவதாக அறிவித்தது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு, இவர்களின் இரண்டு குழந்தைகள் நிலை என்ன, இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு விவாகரத்து வழக்கு பதிவு செய்து, சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிவார்களா.? என்கிற குழப்பம் நீடித்து வந்தது.

மேலும் இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு குழந்தைகள் நலன் கருதி இருவருக்கும் நெருக்கமானவர்கள் மீண்டும் தனுஷ் – ஐஸ்வர்யாவை இணைந்து வைக்கும் முயற்சி தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா வெளியிட்ட இசை ஆல்பத்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் தனுஷ், மேலும் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியான போது வரவேற்று பதிவு செய்திருந்தார், ஆனால் ஐஸ்வர்யா தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்த தனுஷ் பெயரை நீக்கினார்.

இந்நிலையில் மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்த தனுஷ் அடுத்த பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார், மேலும் அவரை வைத்து படம் இயக்க முன்னனி இயக்குனர்கள், இணைந்து நடிக்க நடிகர், நடிகைகள் என பலரும் தயக்கம் காட்டி வந்தனர். இது தொடர்ந்தால் தனுஷ் சினிமாவில் காணாமல் சென்று விடுவார் என்கிற பேச்சும் அடிபட்டது.

இதனை தொடர்ந்து அடி மேல் அடி வாங்கிய தனுஷ், கண் கட்ட பிறகு சூரிய நமஷ்காரம் என்பது போன்று, மீண்டும் மனைவி ஐஸ்வர்யாவிடம் இணைந்தால் தான் தனக்கு வாழ்கை என்பதை உணர்ந்து, மனைவியுடன் இணைவதர்க்கான முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார், தற்பொழுது தான் நடிக்கும் திருசிற்றம்பலம் படத்தில் இசை அமைக்கும் அனிரூத் உதவியை நாடிய தனுஷ், நீ தான் எப்படியாவது என் மனைவியுடன் சேர்ந்து வைக்க வேண்டும் என கேட்க.

அனிரூத் எடுத்த முயற்சியில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர், அப்போது உன்னை நம்ப முடியாது, பரவாயில்லை பிரிந்தது பிரிந்தது தான். உன் தேவைக்கு எந்த நடிகையுடன் சேர்ந்து லூட்டி அடி என ஐஸ்வர்யா சொல்ல, அதற்கு அப்படியெல்லாம் இல்லை, நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் என ஐஸ்வர்யாவிடம் சரண்டராகியுள்ளார் தனுஷ், அப்போது தனுஷ்க்கு ஆதரவாக உடன் இருந்த அனிரூத் பேசியுள்ளார்.

இதன் பின்பு சமாதனம் ஆன ஐஸ்வர்யா தொடர்ந்து தனுஷ் உடன் தொலைபேசியில் பேசுவது, அடிக்கடி இருவரும் சென்னையில் ஆரியபுரத்தில் உள்ள இவர்கள் பிரிவதற்கு முன்பு தங்கியிருந்த வீட்டிற்கு தேவைப்படும் போது ரகசியமாக வந்து தங்கி மகிழ்ச்சியாக இருந்துவிட்டு போவதாக கூறப்படுகிறது.மேலும் ஐஸ்வர்யா சிபாரிசில் தான் தற்பொழுது சினிமா பைனாசியர் அன்புசெழியன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் தனுஷ் இயக்கி, நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

என்ன டான்ஸ் இது.. இதுக்கு உனக்கு சம்பளம் ஒரு கேடா.. பிரபுதேவாவை அவமானப்படுத்தி அனுப்பிய பிரபலம்..!