மிக பெரிய நஷ்டத்தில் நடிகர் லெஜெண்ட் சரவணன்…. கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடினார்… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

தொழிலதிபராக இருந்த லெஜெண்ட் சரவணன் தற்பொழுது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் பல்வேறு கிளைகளை உருவாக்கி தொழில் சாம்ராஜ்யம் நடத்தி வருகின்றவர் அதன் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன், அவருடைய இயற்பெயரான அருள் சரவணன் என்பதை மாற்றி லெஜெண்ட் சரவணன் என பெயரிட்டு கொண்டு தற்பொழுது சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தன்னுடைய கடையின் விளம்பரத்தில் ஆரம்பத்தில் முன்னனி சினிமா நடிகைகளை நடிக்க வைத்து கொண்டிருந்த லெஜெண்ட் சரவணன், வசந்த் அன்ட் கோ நிறுவனர் வசந்தகுமார் அவருடைய கடை விளம்பரதத்தில் அவரே நடிப்பதை பார்த்து, சரவணனுக்கு விளம்பர படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது, மேலும் இவர் கடை விளம்பர படத்தில் பெரும்பாலும் நடிகைகளை மட்டும் ஆட்டம் போட வைக்கும் சரவணன் அந்த வாய்ப்பை எந்த ஒரு நடிகருக்கும் தரவில்லை.

அதற்கு பதிலாக அவரே நடித்து அந்த வாய்ப்பை தனதாக்கி கொண்டார் சரவணன், பண்டிகை நாட்கள் வந்தால் அண்ணாச்சியை கையில் பிடிக்க முடியாது என்று மக்கள் சொல்லும் அளவுக்கு நடிகைகள் மத்தியில் அண்ணாச்சி ஆட்டம் போடும் அவரின் கடை விளம்பரம், கேலி கிண்டலுக்கும் ஆளானது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சினிமா ஆசையில் ஹீரோவாக நடிக்க முடிவு செய்து அவருடைய சொந்த தயாரிப்பில் அதிக செலவில் லெஜெண்ட் படத்தில் நடித்து வருகிறார் அண்ணாச்சி.

இந்த படத்திதை விளம்பரம் செய்வதற்கே அதிக பணத்தை செலவு செய்து வருகிறார் அண்ணாச்சி, யு டியூபில் பிரபலமாக இருக்கின்றவர்களுக்கு பணம் கொடுத்து லெஜெண்ட் படத்தை ஆஹா…ஓஹோ.. என்று புகழ் பாட வைத்து வருகிறார். மேலும் லெஜெண்ட் படத்தின் பாடல்கள், டீசர் என எது வெளிவந்தாலும் அதை பணம் கொடுத்து விளம்பரம் செய்து அதிக வியூஸ் பெற்று சாதனை படைத்தது என்கிற அளவுக்கு செலவு செய்து வருகிறார் லெஜெண்ட் சரவணன் என்று கூறப்படுகிறது.

அதே போன்று படத்தின் ஆடியோ நிகழ்ச்சியை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்தி, தன்னுடைய கடை சப்லையர் குடும்பத்தினர், ஊழியர்கள் என அனைவருக்கும் சிறப்பு டோக்கன் கொடுத்து வரவழைத்து நேரு உள் விளையாட்டு அரங்கை நிரம்பி வழிய செய்தார், இப்படி பெரிய பண செலவில் அண்ணாச்சி நடிக்கும் லெஜெண்ட் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி வரும் லெஜெண்ட் சரவணன்.

இதே விளம்பர தோற்றத்தை வைத்து படத்தை அதிக விலைக்கு விற்று, சினிமாவிலும் லாபத்தை பார்த்து விடவேண்டும் என்று திட்டமிட்டு படத்தை விலைக்கு வாங்க வந்தவர்களிடம் அதிக விலை கேட்க, எந்த ஒரு பதிலும் சொல்லாமல் திரும்பி சென்று கொண்டிருக்கிறார்கள் படத்தை வாங்க வந்தவர்கள், மேலும் பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் லெஜெண்ட் படத்தை வாங்க முன் வரவில்லை என்றும், ஒரு ஷோ இந்த படம் ஓடுவதே பெரிய விஷயம்.

சில நிமிடம் விளம்பர படத்தில் பார்த்த இந்த முகத்தை இரண்டரை மணி நேரம் மக்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் என்பதால் குறைந்த விலைக்கு கொடுத்தால் கூட லெஜெண்ட் படத்தை வாங்க திரையரங்கு உரிமையாளர்கள் யாரும் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் லெஜெண்ட் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் அவருடைய ஆசையை நிறைவேற்ற இந்த ஒரு படத்தில் மட்டும் பல கோடி அவருக்கும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னிடம் பணம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக, அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் இருக்கும் லெஜெண்ட் சரவணன், அந்த ஆசையை கைவிட்டுவிட்டு வழக்கம் போல் தொழிலில் கவனம் செலுத்தி, தன்னுடைய ஆசைக்கு பண்டிகை நாட்களில் அவருடைய கடை விளம்பர படங்களில் நடிகைகள் மத்தியில் ஆட்டம் போட்டுவதோடு நிறுத்தி கொண்டால் அவருக்கு பாதுகாப்பு என்றும்,

அதை விட்டுவிட்டு சினிமா மோகத்தில் அடுத்தடுத்து அதிக பண செலவில் படத்தில் நடித்தால் மிக பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றனர் சினிமா துறையினர்.சினிமா தயாரித்து இழந்து நடு ரோட்டிற்கு வந்த பல கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம் பெறாமல் இருக்க லெஜெண்ட் சரவணன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

என்ன டான்ஸ் இது.. இதுக்கு உனக்கு சம்பளம் ஒரு கேடா.. பிரபுதேவாவை அவமானப்படுத்தி அனுப்பிய பிரபலம்..!