தனுஷ் சினிமா வாழ்க்கை குளோஸ்..! சினிமா பைனான்சியர் மூலம் ரஜினிகாந்த் குடும்பத்தினர் கொடுத்த நெருக்கடி..

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்து கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக இவர்கள் மீண்டும் இணைய இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, இவர்கள் தொடர்பான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகி, இவர்கள் பிரச்சனைக்கு ஒரு முற்று புள்ளியை வைத்துள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து மூன்று படங்கள் வெற்றியை கொடுத்து உச்சத்திற்கு சென்றாலும், அதற்கு பிறகு அவர் சினிமாவில் சந்தித்த தோல்விகளுக்கு, இவர் நடிகர் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் காணாமல் சென்று இருப்பார், ஆனால் ரஜினிகாந்த் செல்வாக்கை பயன்படுத்தி அடுத்தடுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் இவருக்கு அமைந்தது என்பது சினிமா துறையினர் அறிந்த ஓன்று.

இந்நிலையில் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த நடிகர் தனுஷ், இந்தியவின் முக்கிய பிரபலங்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து கொண்டதும், அவர் ரஜினிகாந்த் குடும்பத்துக்கு பணிந்து போக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார், தனுசும் அப்படி பணிந்து தான் சென்றார், இதே போன்று தனுஷ் பல நேரங்களில் பொருளாதார கஷ்டம் ஏற்பட்ட போது ரஜினிகாந்த் உதவியும் செய்துள்ளார்.

இந்நிலையில் ஆடுகளம் படத்தில் நடித்த பின்பு தனுஷ் வளர்ச்சி மேலும் அதிகரித்தது, அடுத்தடுத்து அவர் உயர செல்ல செல்ல அவர் நடவடிக்கைகள் மாறியது, மனைவி ஐஸ்வர்யாவை பொருட்படுத்தாமல் எனக்கு ராஜாவாக நான் வாழ்கிறேன் என்கிற தோரணையில், பல நடிகைகளுடன் லூட்டி, ஐஸ்வர்யா கண்டித்தும் பொருட்படுத்துவது கிடையாது, என தனுஷ் வாழ்கை சென்று கொண்டிருக்க இதனால் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கடந்த ஆறு மாதமாக உச்சக்கட்டம் அடைந்தது.

இந்நிலையில் தற்போது தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிந்துள்ள நிலையில், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு வகையில் தனுஷ் சினிமா வாழ்க்கையை குளோஸ் செய்ய ரஜினிகாந்த் குடும்பத்தினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது, அந்த வகையில், தமிழ் சினிமாவை தனது கட்டுக்குள் வைத்துள்ள பிரபல சினிமா பைனான்சியர் தனது மகள் திருமணத்துக்கு பத்திரிக்கை கொடுக்க நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார்.

அப்போது, ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது எங்கள் தயவில் வளர்ந்த தனுஷ் தற்போது நன்றி உணர்வு இல்லாமல் தனது மகளுக்கு துரோகம் செய்துவிட்டதாக மிக வருத்தத்துடன் லதா தெரிவிக்க, உடனே அந்த சினிமா பைனாசியர், விடுங்கம்மா இனி அவரை வைத்து யாரும் படம் எடுக்காதபடி செய்து விடுவோம் என ஆறுதல் தெரிவித்து கிளம்பியவர், இனி தனுஷை வைத்து படம் எடுப்பவர்களுக்கு பைனாஸ் செய்ய வேண்டாம் என தனது சகாக்களுக்கு உதவிட்டுள்ளார் பைனாசியர் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இனி தனுஷ் சொந்தமாக படம் தயாரித்து நடித்தால் தான் உண்டு, அப்படி படம் எடுத்தாலும், இந்த முக்கிய சினிமா பைனான்சியர் தயவு இல்லாமல் விநியோகஸ்தர்கள் அவர் படத்தை வாங்க தயக்க காட்டுவார்கள் என்பதால், தனுஷ் சினிமா வாழ்க்கை இனி குளோஸ் என கூறப்படுவது குறிப்பிடதக்கது.