இரண்டாவது திருமணத்திற்கு தயார்… விவகாரத்து பெற நீதிமன்றத்தை அணுகிய தனுஷ் ஐஸ்வர்யா தாம்பத்தினர்..

0
Follow on Google News

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி நள்ளிரவு இருவரும் தங்களுடைய 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்து கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தாலும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறுவதற்கான ஐஸ்வர்யா – தனுஷ் இரு தரப்பிலும் எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் குழந்தைகள் நலன் கருதி மீண்டும் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில். இடையில் ஐஸ்வர்யா-தனுஷ் தம்பதியரின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சியில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஜோடியாக ஒன்றாக கலந்து கொண்டனர். மேலும் பிரிந்த ஐஸ்வர்யா- தனுஷ் தம்பதியினரை மீண்டும் இணைத்து வைக்க இரண்டு குடும்பத்தினரும் நடத்திய பேச்சு வார்த்தையும் நடத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து விரைவில் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் இணைய இருப்பதாக கூட தகவல் வெளியானது. ஆனால் குழந்தைகள் ஆசைக்காக மீண்டும் மனைவியுடன் இணைய தனுஷ் விருப்பம் தெரிந்தாலும். முழு மனதாக மனைவி ஐஸ்வர்யாவை ஏற்றுக் கொள்வதற்கு அவருக்கு விருப்பமில்லை என தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்திய குடும்பத்தினரிடம் தனுஷ் தெரிவித்ததாக கூறப்பட்டது.

ஆனால் இருவரும் நல்ல நண்பர்களாக, ஒரு தோழியாக தங்களுடைய வாழ்க்கையை குழந்தைகள் நலன் கருதி தொடர்வோம் என்று தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு, கணவன்- மனைவி என்கின்ற ஒரு கண்டிஷனான வாழ்க்கையை வாழ விரும்பவில்லை. எனக்கான முழு சுதந்திரம் மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு கிடைத்துள்ளது. அதனால், கணவன்-மனைவி என்கிற பந்தத்தில் இணைவதற்கு விருப்பம் இல்லை என தனுஷ் பிடிவாதமாக இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இருவரும் தேவை படும் போது இருவரும் அடிக்கடி சென்னை அரியபுரத்தில் உள்ள வீட்டில் ரகசியமாக சந்தித்து கொள்வார்கள் என்கிற தகவலும் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட இரண்டு மகன்களும் தனுசை அழைத்த போது அதற்கு தனுஷ் வர மறுத்துள்ளார். இதனால் தனுஷ் இல்லாத தீபாவளியை தாத்தா ரஜினிகாந்த், அம்மா ஐஸ்வர்யா உடன் கோலாகலமாக கொண்டாடினார்கள் தனுஷ் இரண்டு மகன்கள்.

இப்படி தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஒரு மனதாக பிரிந்து வாழ்ந்து வந்தாலும் கூட இதுவரை சட்டப்படி விவாகரத்து பெரும் முயற்சியில் ஈடுபடாமல் இருந்து வந்தனர், இதனால் இருவரும் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வரவில்லை, அதனால் தான் இருவரும் இன்னும் சட்டப்படி விவாகரத்து செய்யும் முடிவுக்கு வரவில்லை என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில்.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரில் யாரோ ஒருவர் இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகி விட்டார்கள் அதனால் தான் சட்டப்படி விவாகரத்து கூறி நீதிமன்றம் சென்றுள்ளார்கள் என கூறப்படுகிறது.