முத்துவோட நல்ல மனச புருஞ்சுகிட்ட சுருதி…. விஜயா – ரோஹிணிக்கு இனிமேல் தான் இருக்கு… சிறகடிக்க ஆசையின் அடுத்த ட்விஸ்ட்…

0
Follow on Google News

சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதியிடம் மீனா கண்ணீரோடு நீங்க ஏன் வீட்டுக்கு வர மாட்டேங்கறீங்க என கேட்டு, உங்க அப்பா என்னை எவ்வளவு அசிங்கப்படுத்தினார் தெரியுமா? என்று மீனா அங்கு என்ன நடந்தது என்பதை எல்லாவற்றையும் சொல்கிறார். அதோடு உங்க அப்பா காலில் விழுந்து கூட நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்ல, அதற்கு ஸ்ருதி உங்க ஹஸ்பண்ட் பண்ணின தப்புக்கு நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கணும் என்று கேட்க

அதற்கு மீனா என்னாலதான அவர் அடிச்சாரு. அதனால நானே மன்னிப்பு கேட்கிறேன். நீங்க நம்ம வீட்டுக்கு வரணும் மாமா ரொம்ப ஆசைப்படுறாரு நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கணும்னு தான் அவர் நினைத்துக்கொண்டு இருக்கிறார். நல்ல முடிவா எடுங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

மறுபக்கத்தில் முத்து ரவியை சந்தித்து என் வீட்டுக்கு வர மாட்டேங்குற? மாமியார் வீட்டுக்கு போனா வந்தமான்னு இருக்கணும். அங்கேயே தங்கிட்டியா? என்று கேட்க, அதற்கு ரவி நான் மாமியார் வீட்டில் இல்லை என்று சொல்ல, அப்போ நீ எங்க இருக்க என்று விசாரித்துக் கொண்டிருக்கும் போது ரவியோட வேலை செய்பவர் இவன் இங்கேதான் வேலை பாக்குறவங்கக்கூட தங்கிக்கிறான், ஏற்கனவே அஞ்சு பேரு ஒரு சின்ன ரூமில் தங்ககியிருக்கோம். அவங்க கூட இவனும் தங்கிக்கிறான். எங்களுக்கு இடமே போதவில்லை என்று சொல்ல, அதை கேட்டு முத்து ஃபீல் பண்ணுகிறார்.

அதற்கு முத்து உனக்கு வீடு இருக்கு நீ எதுக்கு வெளியே தங்கனும்? நீ வீட்டுக்கு வாடா உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வா என்று சொல்ல, அதற்கு ரவி ஸ்ருதி வராம நான் அங்க வரமாட்டேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். இந்த நிலையில் ஸ்ருதி நடந்து சென்று கொண்டு போகும்பொழுது ஒருவர் ஸ்ருதியை கையைப் பிடித்து நீ ஏன் தனியா இருக்க நான் இருக்கும் போது நீ எதுக்கு தனியா இருக்கணும் என காருக்குள் இழுக்க முயற்சிக்கிறார், அப்பொழுது சுருதி செவுளில் அரைகிறார். ஆனால் என்னையே அடித்து விட்டாயா என அந்த நபர் முரட்டுத்தனமாக ஸ்ருதியிடம் நடந்து கொள்ள, அந்த சமயத்தில் முத்து வந்து அந்த நபரை அடித்து சுருதியை காப்பாற்றுகிறார்.

அதுமட்டுமில்லாமல் என் மேல எவ்வளவு வேணாலும் கோபப்படு, ஆனா ரவி பாவம், அவனை மட்டும் தண்டிச்சிடாத, அவன் நீ வந்தா தான் வருவேன்னு ஒத்த காலில் நிற்கிறான் என கூறி உண்மையை புரிய வைக்கிறார் முத்து. உடனே ஸ்ருதி வீட்டிற்கு சென்று ஹேண்ட் பேக்கை தூக்கி எறிந்து விட்டு அவன் இன்னைக்கு வந்து ப்ராப்ளம் பண்ணுனா என கூற, இதுவும் முத்துவோட வேலை தான் இருக்கும் என ஸ்ருதியின் அப்பா கூற,

அதற்கு ஸ்டாப்பிட் நீங்கதான் மீனாவ தப்பா பேசுனது, அதனால தானே அவரு அடிச்சாரு, ஆனா நீங்க அப்படி பேச வேண்டிய அவசியமே கிடையாது, அந்த வீட்ல என்னை எவ்வளவு கேர் பண்ணி பார்த்துப்பாங்க தெரியுமா, தெரியாம இங்க வந்துட்டேன் என ஸ்ருதி கூறிவிட்டு, எனக்கு இனி ரவி இருக்கும் இடம் தான் என்னுடைய இடம் என கிளம்பி விடுகிறார்.

இந்நிலையில் சுருதி ரவியுடன் கணவர் வீட்டிற்கு செல்கிறார், ஆனால் இதுவரை முத்துவை பற்றி தவறாக புரிந்து கொண்ட சுருதி தற்பொழுது முத்துவின் நற்குணங்களை பார்த்து, முத்துவுக்கு மரியாதை கொடுக்க ஆரம்பிக்கிறார், மேலும் மீனா உடன் இணக்கமாக இருக்கிறார் சுருதி, மறுப்பக்கம் வீட்டில் எப்போதெல்லாம் விஜயா முத்துவை, மீனாவையும் இன்சல்ட் செய்கிறாரோ அப்போதெல்லாம் சுருதி முத்து – மீனாவுக்கு சப்போர்ட் செய்கிறார்.

இதனால் அண்ணாமலை – முத்து – மீனா -சுருதி -ரவி ஏன் ஒரு அணியாகவும், விஜயா – ரோகினி – மனோஜ் ஒரு அணியாக வீட்டில் இருக்க அடுத்தடுத்து வரும் நாட்களில் சிறகடிக்க ஆசையில் பல விறுவிறுப்பான ஸ்வாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேற இருக்கிறது.