போண்டாமணி சம்பாரித்த பணம் எங்கே… சொந்த ஊருக்கு போக கூட முடியமால் தவிக்கும் பரிதாபம்.!

0
Follow on Google News

இலங்கைத் தமிழரான நடிகர் போண்டாமணி, இலங்கையிலிருந்து தமிழகத்தில் தஞ்சம் அடைந்து, தமிழ் சினிமா வாய்ப்புகள் தேடி சிறுசிறு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று, தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றவர். சுமார் 25 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் போண்டா மணி, பெரும்பாலும் நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகளில் இணைந்து நடித்துள்ளார்.

சமீபத்தில் போண்டாமணி உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு கிட்னி செயலிழந்து விட்டதால், சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால், தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருந்தார் போண்டாமணி. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி போன்ற பல நடிகர்கள் அவருக்கு பண உதவி செய்து வந்தனர்.

பெரும்பாலான படங்களில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த போண்டாமணியை கண்டு கொள்ளாத வடிவேலு தொலைபேசியில் தொடர்பு கொண்டு போண்டாமணியிடம் நலம் கூட விசாரிக்கவில்லை. இது வடிவேலுவின் மனிதாபிமான அற்ற செயலை காட்டுவதாக விமர்சனம் எழுந்தது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக நடித்துவரும் போண்டாமணி இதுவரை சம்பாதித்த பணத்தை எல்லாம் சேமித்து வைக்கவில்லையா.?

அவருடைய பணம் என்னானது.? சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கூட கஷ்டத்தில் ஏன் இருக்கின்றார்.? என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில். இதுகுறித்து விசாரித்ததில், தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களுக்கு மட்டும்தான் லட்சங்களிலும் சம்பளம் வாங்குவார்கள். துணை நடிகர்கள் ஒருநாள் கால் சீட்டுக்கு ஆயிரம் முதல் மூவாயிரம் வரை தான் சம்பளம் வாங்குவார்கள். மேலும் அவர்களுக்கு தினமும் சூட்டிங் இருக்காது.

அதனால் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு தான் அவர்கள் வாங்கும் சம்பளம் இருக்கும் என்பதால், அவர்களால் சேமித்து வைக்க முடியாது, அதனால் தான் தற்போது மருத்துவ சிகிச்சை கூட பணம் இல்லாமல் போண்டாமணி கஷ்டப்படுகிறார். மேலும் சொந்த நாடான இலங்கைக்கு செல்வதற்கு முயற்சி செய்து வருகிறார் போண்டாமணி, ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால் இலங்கைக்கு செல்ல முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.