நடிகையின் அந்த மாதிரி வீடியோ…என்கிட்ட இருக்கு… பயில்வான் சொன்ன பகீர்… எந்த நடிகை தெரியுமா.?

0
Follow on Google News

பல்வேறு சர்ச்சைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பிரபலமான நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், தன்னிடம் பேட்டி எடுத்த youtube சேனல் தொகுப்பாளினியிடம் தகாத முறையில் பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் திரை விமர்சனம் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிடுவார்.

சொல்லப் போனால், பிரபலங்களின் வீட்டிற்குள் இருந்து பார்த்தது போல, அவர்களின் குடும்ப விவகாரங்கள் பற்றி பக்கம் பக்கமாக பேசிக் கொண்டிருப்பார். ஒரு கட்டத்திற்கு மேல் பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகளை தரக்குறைவாகவும் கொச்சையாகவும் பேசி ஆரம்பித்து விட்டார். இதனால் கடுப்பான பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி போலீசில் புகார் கொடுத்த சம்பவங்களும் உண்டு. அதுமட்டுமின்றி, செய்தியாளர் சந்திப்பின் போது, நடிகர் நடிகைகளைக் கடுப்பேத்துவது போலவே கேள்வி எழுப்பக் கூடிய சர்ச்சைக்குரிய நபரும் ஆவார்.

இப்படிப்பட்ட பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் youtube சேனல் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார். அதில் தொகுப்பாளினி அவரிடம் வரிசையாக கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, “நடிகை ரேகா நாயர் கிட்ட நீங்கள் அடி வாங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன, அது உண்மையா?” என்று பயில்வானிடம் கேட்டார். அதற்கு பயில்வான் ரங்கநாதன் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவே இல்லை என்று மலுப்பினார்.

இருப்பினும் அவரை விடாத தொகுப்பாளினி, இல்லை நீங்க அடி வாங்குனதாக தான் சொல்றாங்க இன்று அந்தக் கேள்வியை விடாமல் கேட்டுக் கொண்டிருந்தார். இதனால் பொறுமையை இழந்த பயில்வான் ரங்கநாதன், “நான் அடி வாங்குனதா சொல்றீங்களே அதற்கான வீடியோ ஆதாரம் இருக்கா” என்று கேட்டார்.
அவரது இந்த பாயிண்டை பிடித்துக் கொண்ட தொகுப்பாளினி உடனடியாக, சினிமா நடிகர்கள், நடிகைகள் அவர்களது வாழ்க்கையில் இப்படி உல்லாசமாக இருந்தார்கள் என்று நேரில் பார்த்தது போலவே சொல்லுறீங்களே, அவங்க எல்லாம் இப்படி இருந்தாங்க அப்படி என்பதற்கு உங்ககிட்ட ஆதாரம் இருக்கா… அப்படி இருந்தா அத வெளிய காட்டுங்க ..என்று பயில்வான் ரங்கநாதனை பார்த்து கேட்டார்.

அதற்கு பதில் அளித்த பயில்வான் ரங்கநாதன், “நடிகர் நடிகைகளே அதை மறைக்கவில்லை. உங்களுக்கு தேவை அவங்களுடைய xxx வீடியோவா ..அவர்கள் ரூமுக்குள் தனியா என்ன செய்றாங்க என்ற வீடியோவை காட்ட வேண்டும் என்றால் தனியா ரூமுக்கு வாங்க என்று கேமரா முன் எப்படி பேச வேண்டும் என்று தெரியாமல் இழிவாக பேசியுள்ளார். பயில்வான் ரங்கநாதன் பெண்ணிடம் தகாத முறையில் பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இணையவாசிகள் பலரும் இந்தாளு மேல வழக்குப்பதிவு செய்தால்தான் வாய்க்கொழுப்பு அடங்கும் என்று பலரும் கொந்தளித்து வருகின்றனர். முன்னதாக, இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் தான்தோன்றித்தனமாக பேசிவைக்க; திருவான்மியூர் கடற்கரையில் அவர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது ரேகா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் எனவும் பகிரங்கமாக பேட்டியும் அளித்தது குறிப்பிடத்தக்கது