கோவத்தை கட்டுப்படுத்த அஜித் என்ன செய்வார் தெரியுமா.? யாருக்கும் தெரியாத திடுக்கிடும் தகவல்..!

0
Follow on Google News

நடிகர் அஜித் குறித்து இதுவரை யாரும் அறிந்திராத திடுக்கிடும் தகவல் ஓன்று வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் குமார் ஒரு விசித்திரமான நடிகர் என்று கூட சொல்லலாம், அவரை எளிதில் யாரும் நெருங்கிவிட முடியாது, அந்த அளவுக்கு அவரை தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில் தன்னை வைத்துக்கொண்டுள்ளார். சினிமாவில் அவரை திரையில் மட்டுமே பார்க்க முடியும் மற்ற படி பெரும்பாலும் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார்.

நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் இருவருக்கும் சினிமாவில் போட்டி இருந்தாலும், அஜித் குமாருக்கு இருக்கும் துணிச்சல் விஜய்க்கு இல்லை என்றே சொல்லலாம், அந்த வகையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் நடிக்க ஒப்பந்தமான பின்பு அவருக்கும் இயக்குனர் பாலாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் கடவுள் படத்தில் இருந்து விலகினார் அஜித்குமார், ஆனால் இயக்குனர் பாலா அவருக்கு நெருக்கமான பிரபல பைனான்சியர் அன்புசெழியனை வைத்து மிரட்டி பார்த்தார்.

எந்த ஒரு மிரட்டலுக்கு அஞ்சாமல் துணிந்து பாலா படத்தில் இருந்து வெளியேறினார், அதே போன்று பிரபல தயாரிப்பாளர் KR அவர்கள் அஜித்தை அநாகரிகமாக விமர்சனம் செய்தபோது, கண்ட நாயெல்லாம் அட்வைஸ் பண்ண வேண்டாம் என பகிரங்கமாக தெரிவித்தவர் அஜித். தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த போது, அவருக்கு நடந்த பாராட்டுவிழாவில் அவர் முன்பே மேடையில் பாராட்டு விழாவுக்கு எங்களை கட்டாயப்படுத்தி அழைத்து வரப்படுவதாக கர்ஜித்தவர் அஜித்குமார்.

கருணாநிதி முன்பு அஜித் பேசியதற்கு கடும் எதிர்ப்பு வந்தது , மேலும் பலர் அஜித் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூட சொன்னார்கள், பலர் மிரட்டல் கூட விடுத்ததாக கூறப்படுகிறது, ஆனால் அஜித் மன்னிப்பு கேட்கவில்லை, இப்படி துணிந்து நேரடியாக எதையும் பேச கூடிய அஜித்குமார், அதிகம் கோபம் அடைய கூடியவர் என்று கூறப்படுகிறது, மேலும் தனது கோபத்தை கட்டுப்படுத்த சில பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அஜித்.

அதாவது, அஜித் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் சுமார் மூன்று அல்லது நான்கு நாட்கள் யாருடன் பேசாமல் அமைதியாக அந்த அறையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு தேவையான உணவு போன்றவைகள் மட்டும் அவர் இருக்கும் அறையின் வெளியில் வைத்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. அஜித் உணவு சாப்பிட பின்பு பாத்திரங்களை வெளியில் வைத்து விடுவார் என்றும், இதே போன்று சுமார் மூன்று முதல் நான்கு நாட்கள் தனி அறையில் இருக்கும் அஜித்குமார்.

இந்த நான்கு நாட்களில் வெளியில் என்ன நடக்கிறது, என்கிற எந்த ஒரு தகவலும் அவருக்கு தெரியாது, மேலும் அவர் தனி அறையில் இருக்கும் நாட்களில் யாருடனும் பேசமாட்டார் என கூறப்படுகிறது. இப்படி தான் தனது கோபத்தை கட்டுப்படுத்த தனி அறையில் இருந்து இதை ஒரு பயிற்சியாக எடுத்து வருகின்றவர் நடிகர் அஜித்குமார் என சமீபத்தில் சினிமா துறையை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் தெரிவித்தது குறிப்பிடதக்கது.

டென்ஷனான அஜித்…  கண்ட நாய்கள் எல்லாம் அட்வைஸ் பண்ணுவதா… என்ன நடந்தது தெரியுமா.?