ஐஸ்வர்யா அடாவடி.. கதறி அழும் இரண்டு மகன்கள்..! தனுஷ் என்ன செய்ய போகிறார் தெரியுமா.?

0
Follow on Google News

ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிவதாக அறிவித்து, கடந்த நான்கு மாதங்களால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியரின் இரண்டு மகன்களும் தாய் ஐஸ்வர்யா கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றனர். ஐஸ்வர்யா தற்பொழுது சினிமாவில் பிசியாக இருப்பதால் ஐஸ்வர்யா அம்மா லதாவிடம் இரண்டு மகன்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு தனுஷ் உடன் சேர்ந்து வாழ்ந்து வந்த போது கூட பெரிதாக குழந்தைகளை ஐஸ்வர்யா கண்டு கொள்வதில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் யாத்ரா, லிங்கா இருவருக்கு தாய் ஐஸ்வர்யாவை விட தந்தை தனுஷை தான் மிகவும் பிடிக்கும் என்றும், தந்தை தனுஷ் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், அதிக நேரம் தனது இரண்டு மகன்களிடம் நேரத்தை செலவு செய்வார், ஆனால் தாய் ஐஸ்வர்யா எப்போது யோகா பயிற்சி, வெளிநாடு ஷாப்பிங், மியூசிக் ஆல்பம், இப்படி எதாவது ஒன்றை செய்து கொண்டு தனது இரண்டு மகன்களை கண்டு கொள்வதில்லை ஐஸ்வர்யா என கூறப்படுகிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிந்த பின்பு ஒரு முறை ஊட்டிக்கு தனது மகன்களுடன் சென்று மகிழ்ச்சியாக இருந்த தனுஷ், பின்பு சென்னையில் நடந்த இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சியில், தனது இரண்டு மகன்களுடன் கலந்து கொண்ட புகைப்படம் வெளியானது, மேலும் தந்தை தனுஷ் மீது இரண்டு மகன்களும் அளவு கடந்த பாசத்துடன் இருப்பதாக கருத்துக்கு நிலவி வந்ததை தொடர்ந்து, தனுஷ் மீது மக்கள் மத்தியில் அனுதாபம் ஏற்பட்டது.

அதே நேரத்தில், மியூசிக் ஆல்பம், மீண்டும் இயக்குனர், என ரெம்ப பிசியாக இருந்து வந்த ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகளை பார்த்து, இரண்டு குழந்தைகளையும் ஐஸ்வர்யா கண்டு கொள்வதே இல்லை என்றும், இரண்டு குழந்தைகளுக்கும் தாய் ஐஸ்வர்யாவை விட தந்தை தனுஷ் மீது தான் பாசம் அதிகம் என தகவல் வெளியாகி, ஐஸ்வர்யாவுக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்து வந்தது. இதனை தொடர்ந்து தனக்கு எதிரான விமர்சனங்களுக்கு பதிலடி தரும் விதத்தில்.

இரண்டு மகன்களுடன் ஜாலியாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்து வெளியிட்ட ஐஸ்வர்யா, தன் மீதும் இரண்டு குழந்தைகளும் பாசத்துடன் இருப்பதாக வெளிக்காட்டினார். ஆனால் தனுஷ் தன்னுடைய மகன்களுடன் இருந்த புகைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பு ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படத்துக்கு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து இனி இரண்டு மகன்களையும் தனுஷிடம் நெருக்க விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என ஐஸ்வர்யா முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது பள்ளி விடுமுறை என்பதால் தந்தை தனுஷிடம் ஜாலியாக வெளியில் செல்ல இரண்டு மகன்களும் ஆசைப்படுவதாகவும், ஆனால் அதெல்லாம் வேண்டாம் நான் உங்களை அழைத்து செல்கிறேன் என ஐஸ்வர்யா தெரிவிக்க, அம்மா ப்ளீஸ் …அப்பா கூட தான் ஜாலியா இருக்கும் என இரண்டு மகன்களும் அடம் பிடிக்க, அதெல்லாம் கூடாது என திட்டவட்டமாக முடியாது என ஐஸ்வர்யா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு குழந்தைகளும் தந்தை பாசத்துக்காக ஏங்கி கொண்டிருப்பதை புரிந்து கொள்ளாமல், தன்னுடைய விருப்பு வெறுப்புகளை குழந்தைகளிடம் ஐஸ்வர்யா காட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்றும், மேலும் இதற்கு தனுஷ் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், நிச்சயம் பள்ளி விடுமுறை முடிவதற்குள் தனுஷ் தன்னுடைய இரண்டு மகன்களையும் எதாவது ஒரு சுற்றுலா தளத்திற்கு அழைத்து சென்று மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டென்ஷனான அஜித்…  கண்ட நாய்கள் எல்லாம் அட்வைஸ் பண்ணுவதா… என்ன நடந்தது தெரியுமா.?