சிறுத்தை சிவாவை நம்ப வைத்து மோசம் செய்த சூர்யா…. கடவுள் போல் காப்பாற்றிய அஜித்குமார்..!

0
Follow on Google News

குடும்பங்கள் கொண்டாடும் பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறவர் சிறுத்தை சிவா, இவர் இயக்கத்தில் வெளியான விவேகம் படத்தை தவிர்த்து அணைத்து படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் வெறும் 6 படங்கள் மட்டுமே இயக்கியுள்ள சிறுத்தை சிவா அதில் நடிகர் அஜித் நடிப்பில் நான்கு படங்கள் இயக்கியுள்ளார். அஜித் நடிப்பில் வெளியன் வீரம், வேதாளம், விஸ்வாசம் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் அனைவரும் கொண்டாடும் வகையில் இருந்தது, எதிர் விமர்சனமே இல்லாத படம் விஸ்வாசம் என்று சொல்லாம். இந்த படம் வெளியான பின்பு ரஜினி நடிப்பில் அண்ணாத்தே படத்தை இயக்கினார் சிறுத்தை சிவா. இந்நிலையில் சுமார் 10 வருடங்களாக ஒரு பிளாக் பஸ்டர் படம் கூட கொடுக்க முடியமால் தவித்து வந்த நடிகர் சூர்யா நடிப்பில் நீண்ட வருட காத்திருப்புக்கு பின் கிடைத்த வெற்றி படம் சூரரை போற்று மற்றும் ஜெய் பீம்.

இந்த படங்கள் கூட திரையரங்குகளில் வெளியாகாமல் OTT தளத்தில் தான் வெளியானது, ஆகையால் சூரரை போற்று, ஜெய்பீம் போன்ற படங்கள் கொண்டாடும் வகையில் அமையவில்லை. இதனை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து கொண்டிருந்த போதே, சிறுத்தை சிவாவை அழைத்து கதை கேட்டுள்ளார் நடிகர் சூர்யா, அண்ணாத்தே படத்தை முடித்த கையோடு சூர்யாவுக்காக கதையை தயார் செய்துள்ளார் சிவா.

முதலில் கதை நல்லா இருக்கு என்று சொன்ன சூர்யா, விரைவில் இந்த படத்தை தொடங்கலாம் என தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து இயக்க இருக்கும் புதிய படத்துக்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார் சிறுத்தை சிவா. ஆனால் நடிகர் சூர்யா அடுத்தடுத்து இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் பாலா படங்களில் கமிட்டாகியுள்ளார். பாலா படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்துவிட்டு தன்னுடைய படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்த்த சிறுத்தை சிவாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, கதையில் சிறிய திருத்தம் செய்து வர சொல்லி சிறுத்தை சிவாவிடம் தெரிவித்துவிட்டு பாலா படத்தில் நடிக்க சென்றுவிட்டார் சூர்யா என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்பொழுது சூர்யா சொன்னது போன்று கதையில் திருத்தம் செத்துவிட்டு சூர்யாவை சந்தித்துள்ளார் சிறுத்தை சிவா.

மீண்டும் கதையில் மாற்றம் செய்யவேண்டும் என சூர்யா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பாலா படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் படத்தில் நடிக்க சூர்யா தயாராக இருப்பதை உணர்ந்த சிவா, தன்னுடைய படத்தில் நடிக்க விருப்பம் இல்லை அதை நேரடியாக சொல்லாமல், ஒவ்வொரு முறையும் கதை சரியில்லை என திருப்பி அனுப்பி வருகிறார் என்பதை உணர்ந்த சிறுத்தை சிவா அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார்.

இனி சூர்யாவை மீண்டும் சந்திப்பது கிடையாது என்றும், மேலும் அடுத்து அஜித்தை வைத்து படம் இயக்க முடிவு செய்து அவருக்கான கதையையும் தயார் செய்து அஜித்துக்கு தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆரம்பத்திலே தன்னுடன் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லியிருக்கலாம், காக்க வைத்து ஏமாற்றிவிட்டார் சூர்யா என தனக்கு நெருக்கமானவர்களிடம் சிவா தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

நீயெல்லாம் சோறு தான் சாப்புடுறீயா.? சிம்புவை வெளுத்து வாங்கிய ஹரி…எதற்கு தெரியுமா.?