பத்திரிகையாளர் மரணம்… இதுவரை அஜித் பற்றி வெளிவராத ரகசியம்.. என்ன செய்தார் அஜித் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித்குமார் மிகவும் எளிமையானவர் என்கின்ற ஒரு பார்வை உண்டு. ஆனால் அவர் வாழ்க்கையை வித்தியாசமான முறையில் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருவதை பலரும் உணர்ந்திருக்க மாட்டார்கள். விலை உயர்ந்த பைக்கில் ஐரோப்பிய நாடுகளில் பயணம், தற்பொழுது இந்தியா முழுவதும் பைக்கில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். இதில் ஏதோ அஜித் பைக் பிரியர் என்பதால் அவர் இப்படி செய்யவில்லை.

பைக்கில் சென்று உலகம் முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா தளத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வாழ்ந்து வருகிறார் அஜித் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.பொதுவாக எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிகளுக்கும் அஜித் வருவது கிடையாது. பத்திரிக்கையாளர்களை சந்திப்பதே கிடையாது என்கின்ற ஒரு கொள்கையை கடுமையாக கடைபிடித்து வருகிறவர் அஜித்குமார். ஆனால் அஜித் பற்றிய பல வியப்பூட்டும் ரகசிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அஜித் ஒரு காலகட்டத்தில் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்து வந்துள்ளார், அதே நேரத்தில் பத்திரிக்கையாளர்களை தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து தனித்தனியாக சந்தித்து நீண்ட நேரம் பேசியும் வந்துள்ளார். இதனால் பத்திரிகையாளர்கள் உடன் அஜித்துக்கு நெருங்கிய நட்பு இருந்து வந்துள்ளது. இதே போன்று சினிமா துறையை சேர்ந்தவர்களிடம் நெருங்கி பழகி வந்துள்ளார்.

ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் விபத்தில் இறந்து விடுகிறார், அந்த பத்திரிக்கையாளரின் உடல் அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த தகவல்அறிந்த சக பத்திரிகையாளர்கள் அனைவரும் மறைந்த அந்த பத்திரிக்கையாளர் வீட்டிற்கு சென்றபோய் பார்த்தபோது, இவர்கள் வருவதற்கு முன்பே அஜித் அங்கே வந்து, இறந்த பத்திரிக்கையாளரின் உடலை அவரே தன்னுடைய தோளில் சுமந்து இறக்கி வைத்துள்ளார்.

இப்படி பத்திரிக்கையாளர் மற்றும் சினிமா துறையினர் உடன் மிக நெருக்கமாகவும், பாசமாகவும் பழகி வந்த அஜித் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு, பொது நிகழ்ச்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவற்றை முழுவதுமாக புறக்கணிக்க தொடங்கினார். அவருடைய வாழ்க்கையில் இந்த திடீர் மாற்றம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து அவருடன் இதற்கு முன்பு நெருக்கமாக பழகிய சினிமா துறையினரும் பத்திரிக்கையாளர்களுக்கும் கூட தெரியவில்லை.

அதே நேரத்தில் ஒரு காலத்தில் தங்களுடன் நெருங்கி பழகிய அஜித்குமார், தற்பொழுது எங்களை எல்லாம் நினைவில் வைத்திருப்பாரா என்று கூட தெரியவில்லை என்கின்றனர் அஜித் உடன் நெருங்கி பழகிய பத்திரிக்கையாளர்கள் மற்றும் சினிமா துறையினர் என்பது குறிப்பிடத்தக்கது.