தீடிரென இந்தியாவில் இருந்து வெளியேறும் அஜித்… அடுத்த விக்னேஷ் சிவன் படம் என்னாச்சு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் துணிவு, இந்த படம் பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் வாரிசு படம் வெளியாகும் அதே தேதியில் தன்னுடைய படத்தையும் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அஜித்குமார். அந்த வகையில் இரவு பகல் பாராமல் துணிவு படத்தின் இறுதி கட்ட வேலைகள் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

துணிவு படத்தை முடித்துவிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகி இருந்தார் அஜித்குமார். இந்த படத்திற்கான அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். துணிவு படத்தை முடித்த கையோடு விக்னேஷ் சிவன் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, அடுத்து எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் ஒன்றரை வருடம் பைக் மூலம் உலகம் முழுவதும் சுற்றிவர திட்டமிட்டு இருந்தார் அஜித்.

ஒன்றரை வருடம் உலகம் முழுவதும் சுற்றி வந்த பின்பு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுப்பர் அஜித் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது துணிவு படத்தின் படப்பிடிப்பை முடித்தவர் உடனே அஜித் வாடிக்கையாக முடிவெட்டும் ஆழ்வார்பேட்டையைச் சார்ந்த ஒரு சலூன் கடைக்காரரை உடனடியாக அழைத்து துணிவு படத்திற்காக தான் வைத்திருந்த நீண்ட தாடியை எடுத்து விட்டார்.

இதனை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் 60 நாள் சுற்றுப்பயணமாக உலகம் முழுவதும் பைக்கில் சுற்றி வருவதற்காக தயராக இருக்கிறார் அஜித். இந்த நிலையில் திடீரென்று அஜித் இந்தியாவை விட்டு வெளியே உலக டூர் செல்ல இருப்பதால் ஏற்கனவே கமிட்டாகி இருந்த விக்னேஷ் சிவன் படம் என்னாச்சு என்று அவருடைய ரசிகர்கள் பல குழப்பத்தில் இருந்து வரும் நிலையில், 60 நாள் டூர் முடித்துவிட்டு மீண்டும் விக்னேஷ் சிவன் படத்தில் அஜித் நடிப்பார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது