அஜித் பற்றிய அந்த தகவல்… டென்ஷனான விஜய் உடனே என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

வரும் பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு என ஒரே தேதியில் இரண்டு படம் வெளியாக இருப்பதால் இருவரின் ரசிகர்கள் மத்தியிலும் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் இந்த இரண்டு படங்களும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு படம் சென்சார் சென்ற வந்த பின்பு தான் அந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதற்கு காரணம் படம் சென்சார் செய்யும் போது தாமதம் ஏற்பட்டால் படம் வெளியாகும் தேதி தள்ளி போகலாம் என்பதால் சென்சார் முடிந்த பின்பு தான் அந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அந்த வகையில் வாரிசு மற்றும் துணிவு இரண்டு படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, ஜனவரி 12ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு மற்றும் வாரிசு 2 படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டு திரையரங்குகளில் விநியோகஸ்தர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

வாரிசு படத்தின் டப்பிங் வேலைகளை தற்பொழுது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இந்த படம் ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் படம் ஆனால் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. துணிவு படம் ஹாலிவுட் தரத்துக்கு ஏற்ப சண்டை காட்சிகள் என இன்றைய இளம் தலைமுறையை எளிதில் கவர்ந்திருக்கக் கூடிய வகையில் எடுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் வாரிசு ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் படம், மேலும் அதிக படத்தின் நீளம் அதிகம்.

அதனால் வாரிசு படம் மக்கள் மத்தியில் வெற்றி பெறுவது கடினம் என்கின்ற சந்தேகமும் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த நிலையில் அஜித் – விஜய் இருவருக்குமான போட்டி தற்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில, இருவருமே இந்த முறை யார் உண்மையிலேயே பெரியவர்கள் என்பதை பார்த்து விடுவோம் என்கின்ற முடிவில் பொங்கல் பண்டிகையின் போது தங்கள் நடித்த படங்களை ரிலீஸ் செய்கிறார்கள்.

அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியாகும் சென்னை பரங்கி மலையில் உள்ள திரையரங்குகளில் மிகப்பெரிய பிரமாண்ட கட்டவுட் ஒன்று அஜித்துக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் கட் அவுட் புகைப்படத்துடன் விஜயின் கவனத்திற்கு சென்றுள்ளது. உடனே டென்ஷனான விஜய் இதைவிட தனக்கு பெரிய கட்டவுட் உடனே அமைக்க வேண்டும் என்று பிடிவாதமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.

விஜய் கட்டளையேற்று உடனே சென்னை சத்தியம் திரையரங்குகளில் விஜய்க்கு மிகப் பிரம்மாண்டமான கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் இருவருக்குமான மோதல் காரணமாக இது போன்று அடுத்தடுத்து என்ன சம்பவங்கள் நடைபெற இருக்கிறது என எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் அதிகரித்துள்ளது.