அஜித்திடம் இருந்து வந்த மெகா ஆபர்… ஏற்றுக்கொள்ள முடியாது என மறுத்த அருண் விஜய்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி தனக்கான அங்கீகாரம் கிடைக்க பல வருடங்கள் போராடி வந்த நடிகர் அருண் விஜய். ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிய அருண் விஜய், கடந்த 2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் நடித்த வில்லன் கதாபாத்திரம் அந்த படத்தில் ஹீரோவாக நடித்த அஜித்துக்கு இணையாக பேசப்பட்டது.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக அருண் விஜய் நடித்திருந்தாலும் 20 ஆண்டுகள் கடுமையாக போராட்டத்திற்கு பின்பு அவருக்கு சினிமாவில் அங்கிகாரம் கொடுத்த படம் என்னை அறிந்தால். என்னை அறிந்தால் படத்திற்கு முன்பு பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் முடங்கிய அருண் விஜய்க்கு, என்னை அறிந்தால் படத்தின் நடித்த விக்டர் கதாபாத்திரத்திற்கு பின்பு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

கடந்த வருடம் ஹரி இயக்கத்தில் வெளியான யானை திரைப்படம் அருண் விஜய்யை ஆக்சன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் உயர்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் அஜித் நடிக்கும் படத்தில் வில்லன் கதாபாத்திர வாய்ப்பு அருண் விஜய்க்கு தேடி வந்துள்ளது. தற்பொழுது மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அஜித் புதிய படத்தில் அருண்விஜய் வில்லனாக நடிக்க அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளது மகிழ் திருமேனி தரப்பு.

இதற்க்காக அருண்விஜய் தற்பொழுது நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பேசியுள்ளது அஜித் பட குழு. ஆனால் அஜித் உடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த பின்பு தான் தன்னுடைய சினிமா கேரியர் முன்னேற்றமடைந்தது என்கிற நன்றியை மறுக்காத அருண்விஜய், இருந்தாலும் தற்பொழுது அஜித் படத்தில் நடிக்க முடியாத சூழல் அருண் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் பாதியிலே நின்ற படம் வணங்கான். தற்பொழுது பாலா தன்னுடைய சொந்த தயாரிப்பில் வணங்கான் படத்தை ஆரம்பத்தில் இருந்து புதியதாக எடுக்க உள்ளார், இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்க உள்ளார், படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. அதற்கான வேலைகளில் இயக்குனர் பாலா மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஆகையால் தான் ஏற்கனவே பாலா படத்தில் கமிட் ஆகியுள்ளதால், அதை விட்டுவிட்டு வர முடியாது என்பதை சங்கடத்துடன் பட குழுவினரிடம் தெரிவித்திருக்கிறார் அருண் விஜய், இருந்தாலும் அஜித் நடிக்கும் படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து மிகப்பெரிய தொகை சம்பளமாக அருண் விஜய்க்கு ஆஃபர் கொடுத்துள்ளார்கள். ஆனால் அருண் விஜய் உறுதியாக எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் அஜித் படத்தில் நடிப்பதற்கு தாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் தன்னை நம்பி இயக்குனர் பாலா புதிய படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை அனைத்தையும் தயார் நிலையில் வைத்துள்ள இந்த நிலையில், அதிக சம்பளம் கிடைக்கின்றது என்பதற்காக சென்றால் பாலாவுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து அதிக பணம் கொடுத்தாலும் அஜித் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை அருண் விஜய் என கூறப்படுகிறது.