அஜித்தால் அவமானப்பட்டு கண் கலங்கிய விக்னேஷ் சிவன்… தூக்கி எறிந்துவிட்டு வர சொன்ன நயன்தாரா..

0
Follow on Google News

நடிகர் அஜித் துணிவு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பக்கட்டத்திலே, தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் விக்னேஷ் இவனுக்கு அளித்தார்,இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பது உறுதி செய்யப்பட்டது, மேலும் புதிய படத்திற்கான திரைக்கதை மற்றும் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்த விக்னேஷ் சிவன். அந்த படத்திற்கான லொகேஷன் தேர்வையும் செய்து முடித்தார்.

மேலும் அஜித் நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கான அனைத்து நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் கால் சீட்டும் பெற்றார் விக்னேஷ் சிவன். இதே நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவனை நேரில் அழைத்த அஜித், மீண்டும் ஒருமுறை முழு கதையும் கேட்டு எனக்கு கதை பிடிக்கவில்லை, இதில் என்னால் நடிக்க முடியாது என மறுத்து விட்டார் அஜித்.

படத்தில் கமிட்டாவதற்கு முன்பே கதையை கேட்டுவிட்டு தான் விக்னேஷ் சிவனை ஓகே செய்துள்ளார் அஜித், ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் இந்த நேரத்தில் அஜித் படம் பிடிக்கவில்லை என்று ஒரே போடாக போட்டவுடன் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக இந்த படத்திற்காக உழைத்த விக்னேஷ் சிவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றுள்ளார். மேலும் அஜித்தை எவ்வளவோ கன்வின்ஸ் செய்ய விக்னேஷ் சிவன் முயற்சித்தும் அதற்கு அஜித் உடன்படவில்லை.

இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான லைக்காவை நேரில் சந்தித்து கன்வின்ஸ் செய்து விடுவோம் என்கின்ற நம்பிக்கையில் லண்டன் சென்றுள்ளார் விக்னேஷ் சிவன். ஆனால் விக்னேஷ் சிவன் லண்டன் செல்வதற்கு முன்பே லைக்கா நிறுவனத்திடம் பேசிய அஜித், விக்னேஷ் சிவனின் கதை தனக்கு பிடிக்கவில்லை இயக்குனரை மாற்ற வேண்டுமென்றாலும் கூட அதற்கு நான் தயார் என்று தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் லண்டன் செல்வதற்கு முன்பு லைக்கா நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசிய நயன்தாரா, இந்த படத்தில் இருந்து விக்னேஷ்சிவன் வெளியேற்றப்பட்டால் எங்களுக்கு அது சினிமாவில் மிகப்பெரிய அவமானமாக கருதப்படும். மேலும் சுமார் 8 மாதங்களுக்கு மேலாக தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் இந்த படத்திற்காக அதிகம் வேலை செய்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கப்படும் இந்த சூழ்நிலையில் இயக்குனரை மாற்றினால் எங்களுடைய எதிர்காலம் சினிமாவில் மிகப்பெரிய கேள்விக்குறி ஆகும்.

உங்களுக்கு கதையில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால் நீங்கள் விக்னேஷ் சிவனிடம் சொல்லுங்கள், நிச்சயம் மாற்றம் செய்வார் என நயன்தாரா பேசியுள்ளார். இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் லண்டன் சென்று லைக்கா நிறுவனத்தை சந்தித்தபோது அஜித்தும் லண்டனில் இருந்துள்ளார். அந்த கலந்துரையாடலில் விக்னேஷ் சிவன் கன்வின்ஸ் செய்ய முயன்றுள்ளார், ஆனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து விக்னேஷ் சிவனை அவமானப்படுத்த வகையில் பதில் இருந்துள்ளது.

இந்த குப்பை கதைக்கு 200 கோடி பட்ஜெட்டா, மிக பெரிய ஸ்டார் நடிக்க வேண்டிய கதையா இது.? எட்டுமாதமாக இந்த ஸ்கிரிப்டை தான் எழுதினீர்களா.? என்று விக்னேஷ் சிவனை அவமானப்படுத்தும் வகையில் தயாரிப்பு தரப்பில் இருந்து பதில் வந்துள்ளது,உச்சக்கட்ட அவமானத்துடன் லண்டனில் இருந்து மனைவி நயன்தாராவை தொடர்பு கொண்டு பேசிய விக்னேஷ் சிவன், தனக்கு நடந்த அவமானத்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

உடனே கணவனுக்கு ஆறுதலாக பேசிய மனைவி நயன்தாரா, இப்படி அவமானப்பட்டு ஒரு படத்தில் காமிட்டாக தேவையில்லை, மீண்டும் அவர்களை கன்வின்ஸ் செய்ய முயற்சிக்க வேண்டாம், உடனே அந்த ப்ரோஜெட்டை தூக்கி எறிந்துவிட்டு வா என கணவருக்கு ஆறுதலாக இருந்துள்ளார் நயன்தார. இந்நிலையில் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அஜித் நடிக்க இருக்கும் புதிய படம் வெளியாகும் அதே தேதியில் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கம் புதிய படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் நயன்தாரா தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.