அட கடவுளே.. இவரா.? ரஜினியை பார்த்து டென்ஷனான அஜித் ரசிகர்கள் எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட பின்பு, அவருக்கு பதில் இயக்குனர் மகில் திருமேனி அஜித் நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மகிழ் திருமேனி திரைக்கதை எழுதும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று லைக்கா நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது . அதில் நாளை காலை 10:30 மணிக்கு மிகப்பெரிய ஒரு அறிவிப்பு வெளியாக இருக்கிறது என்று அதில் குறிப்பிட்டிருந்தது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாக இருப்பதாக நினைத்து அஜித் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினார்கள்.

மேலும் மிகுந்த வரவேற்புடன் அடுத்த நாள் காலை 10,30 மணி வரையும் காத்திருந்த நடிகர் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைத்தது லைக்கா நிறுவனம் காலை 10:30 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பு. நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து லைக்கா நிறுவனத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் லைக்கா தயாரிக்கும் ரஜினி நடிக்கும் 170-வது படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை லைக்கா நிறுவனம் 10.30 மணிக்கு வெளியிட்டுள்ளது இதை பார்த்து டென்ஷனான அஜித் ரசிகர்கள் இவருக்காக நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம் என்று ரஜினி பட அப்டேட் பார்த்து செம்ம டென்ஷனில் உள்ளனர்