அஜித் – விக்னேஷ் சிவன் இடையில் புகுந்து விளையாடிய திரிஷா… பிரச்சனைக்கு காரணமே திரிஷா தானாம்.

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்த நடிகை திரிஷா தொடர்ந்து முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து டாப் ஒன் நடிகையாக வலம் வந்தார். ஆனால் நயன்தாராவின் மார்க்கெட் உயர்ந்த பின்பு சினிமாவில் சில காலம் காணாமல் சென்று விட்டார் திரிஷா. இதனால் தொழில் ரீதியான திரிஷா – நயன்தாரா இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி இருந்து வந்தது.

இருந்தும் தான் இழந்த மார்க்கெட்டை மீட்டெடுக்க பலமுறை திரிஷா முயற்சி செய்து, கதநாயகிக்கு முக்கிய துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடித்து என்ட்ரி கொடுக்க முயற்சித்தாலும், அது நயன்தாரா இருக்கும் வரை முடியாது என்கின்ற சூழல் தமிழ் சினிமாவில் இருந்து வந்தது. மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகை திரிஷாவுக்கு கருணை காட்டுவது போல் நயன்தாரா தயாரித்து நடித்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தில் முதலில் சமந்தாவுக்கு பதில் திரிஷா நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

ஆனால் நயன்தாரா கருணை காட்டும் அளவுக்கு நான் பரிதாப நிலையில் இல்லை என, அந்த வாய்ப்பை புறக்கணித்து விட்டார் திரிஷா. அந்த அளவுக்கு இருவருக்குமான போட்டி மிக கடுமையாக தமிழ் சினிமாவில் இருந்து வந்துள்ளது. நயன்தாரா திருமனம் முடிந்த பின்பும் தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருந்து வந்தாலும் கூட, அவருடைய மார்க்கெட் தற்பொழுது மிக பெரிய சரிவை சந்தித்து, கைவசம் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் முடங்கி போய் உள்ளார் நயன்தாரா.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகை த்ரிஷாவுக்கு தற்பொழுது தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, நயன்தாரா இல்லாத தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியுள்ள நடிகை திரிஷா,

விஜய் சிபாரிசில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார், அதே போன்று அஜித் நடிக்கும் புதிய படத்தில் வாய்ப்பு கேட்டு அஜித்தை தொடர்பு கொண்டுள்ளார் திரிஷா. உடனே லைக்கா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கம் அஜித் நடிக்கும் புதிய படத்தில் திரிஷா நடிக்க சிபாரிசு செய்துள்ளார் அஜித், இதற்கு தயாரிப்பு தரப்பு ஓகே செய்துள்ளது, இதனால் திரிஷாவுக்கு நடிப்பது உறுதி என்று செய்திகளும் வெளியானது.

ஆனால், ஏற்கனவே திரிஷாவுக்கு எங்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கும், அதனால் திரிஷா வேண்டாம் என விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவிக்க, அஜித் நடிக்கும் படத்தில் திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் சிபாரிசு செய்த ஒரு நடிகையை விக்னேஷ் சிவன் புறக்கணித்தது அஜித்துக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, இருந்தும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு முழு கதையையும் விக்னேஷ் சிவன் தெரிவிக்க அந்த கதை பிடிக்க வில்லை என அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இருவரும் முடிவு செய்து அஜித் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் விக்னேஷ் சிவன். இப்படி விக்னேஷ் சிவன் அதிரடியாக தூக்கி வீசப்பட்டது காரணம் திரிஷா விவகாரம் தான் என்று கூறப்படுகிறது.

தான் சிபாரிசு செய்த் திரிஷாவை வேண்டாம் என விக்னேஷ் சிவன் புறக்கணித்த கோபமும், கதை சரியில்லை என்கிற கோபமும் தான் விக்னேஷ் சிவன் வெளியேற்ற பட்டார் என்றாலும் கூட, அஜித் சிபாரிசை ஏற்று த்ரிஷாவை இந்த படத்தில் விக்னேஷ் சிவன் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தால், கதை சரியில்லை என்றால், அந்த கதையில் மாற்றம் செய்ய வலியுறுத்தி இருப்பார், அல்லது வேறு ஒரு கதையை தயார் செய்ய சொல்லிருப்பார் அஜித்.

இதனால் அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறுவதில் இருந்து தடுக்கப்பட்டிருக்கலாம், ஆனால் திரிஷா விவகாரத்தில் ஏற்கனவே விக்னேஷ் சிவன் மீது இருந்த கோபம் தான் அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறுவதற்கு காரணம் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.