நூறு பேர்கூட போவேன்…கேஸ் போட்டா தீக்குளிப்பேன்.. காவல் துறையை மிரட்டும் ரவுடி பேபி சூர்யா……

0
Follow on Google News

சேனலை முடக்குனா தீக்குளிப்பேன்: ரவுடி பேபி வெளியிட்ட வைரல் வீடியோ.. டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. ஆபாசமாக உடையணிந்து இவர் போடும் ஆட்டத்திற்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. டிக்டாக் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பிறகு தனியாக யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் வருமானமும் ஈட்டி வருகிறார்.

இந்நிலையில், யூடியூப் இணையதளத்தில் மிகவும் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்கதாவும் வகையில் வீடியோக்களை வெளியிடும் சேனல்களை முடக்க காவல்துறை முயற்சி எடுத்து வருகிறது. அந்த வரிசையில் ரவுடி பேபி சூர்யாவின் சேனலையும் காவல்துறை முடக்கப்போவதாக செய்திகள் வெளியானதும், கொதித்தெழுந்த சூர்யா, காவல்துறையை மிரட்டும் வகையில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், “எனது சேனலை முடக்கப் போறீங்களா… முடக்குங்க… அப்படி முடுக்கினால் நான் தவறான பாதைக்குப் போவேன். என் பிள்ளைகள் மேல ஆணையா சத்தியமா போவேன். நூறு பேருடன்… அதுக்கு தயார்… என் மேல் விபச்சார கேஸ் போட்டா தீக்குளிப்பேன்”என மிரட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி அவ்வப்போது ஏதாவது பரபரப்பை கிளப்பும் வகையில் ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு அதன்மூலம் சூர்யா நன்றாக சம்பாதித்து வருகிறார் என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

சமீபத்தில் ரவுடி பேபி சூர்யாவின் காதலரான சிக்கா என்ற சிக்கந்தரை, சூர்யா தேவி என்பவர் செருப்பால் அடித்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதைத்தொடர்ந்து சூர்யா தேவி மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால் பயந்துபோன சூர்யாதேவி தற்கொலை செய்துபோவதாக போலீசாருக்கு வீடியோ ஒன்றை அனுப்பிவிட்டு வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய சம்பவம் அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது அதே பாணியை சூர்யாவும் பின்பற்றுவதாக கூறுகின்றனர்.